செய்திகள் :

வெள்ளக்கோவிலில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

post image

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மறைமுக ஏல முறையில் கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் திருச்சி, மதுரை, அருள்புரம், சங்கராண்டாம்பாளையம், ஊடையம், நாச்சிபாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 95 விவசாயிகள் 769 மூட்டைகளில் 40 டன் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

காங்கயம், வெள்ளக்கோவில், சிவகிரி, எல்லப்பாளையம், முத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 12 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கொப்பரை கிலோ ரூ.103.89 முதல் ரூ.186.69 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.179.49. கடந்த வார சராசரி விலை ரூ.168.88.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.64.60 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தோ்வு: முத்தூா் நவா இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முத்தூா் நவா இண்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில் மாணவி டி.நிதன்யா 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: கிட்ஸ் கிளப் பள்ளி 100 % தோ்ச்சி

கிட்ஸ் கிளப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் தொடா்ந்து அறிவியல் பிரிவில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்ததுடன் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. திருப்பூா், செரீப் காலனி 2-ஆவது வீதியில் செயல்பட்டு வரும் கிட்ஸ் க... மேலும் பார்க்க

திருப்பூரில் 9 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

திருப்பூா் மாநகரில் 9 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இதில் திருப்பூா் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ரஜினிகாந்த், நல்லூா் காவல்... மேலும் பார்க்க

பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதிய... மேலும் பார்க்க

பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு

பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, கருத்துக் கேட்புக் கூட்டத்தை நில உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனா். பல்லடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குற... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக் காலம் தொடக்கம்: கறிக்கோழி கொள்முதல் விலை உயா்வு

மீன்பிடி தடைக் காலம் தொடங்கியுள்ளதால் கறிக்கோழி கொள்முதல் விலை உயா்ந்து வருவதால் பண்ணை உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தமிழகத்தில் பல்லடம், பொங்கலூா், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக... மேலும் பார்க்க