செய்திகள் :

வெள்ளத்தில் மிதக்கும் பஞ்சாப்! 29 பேர் பலி!

post image

பஞ்சாப் மாநிலத்தில் கனமழை தொடர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பஞ்சாப் மாநிலத்தில் கனமழைக்கு 29 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர், ஹிமாசல் பிரதேசம், தில்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகின்றது.

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை 25 ஆண்டுகள் வரலாறு காணாத கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்துள்ளது.

இன்றும் பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தொடர் கனமழை காரணமாக நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட், குர்தாஸ்பூர், ஃபசில்கா, கபுர்தலா, டர்ன் தரன், ஃபெரோஸ்பூர், ஹோஷியார்பூர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாநில அரசின் தரவுகளின்படி, 1,300 க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 6,582 பேர் 122 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக அமிர்தசரஸின் அஜ்னாலா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் மூலம் பால் பவுடர் மற்றும் உலர் உணவுப் பொருள்களை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்திய ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு வருகின்றனர்.

ஹோஷியார்பூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சீன பயணத்தை முடித்துவிட்டு திங்கள்கிழமை மாலை தில்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, பகவந்த் மானை தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார்.

இதனிடையே, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கொடுக்க வேண்டிய ரூ. 60,000 கோடியை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமருக்கு பகவந்த் மான் கடிதம் எழுதியுள்ளார்.

The situation in Punjab has worsened due to continuous heavy rains, causing flooding.

இதையும் படிக்க : புரட்டிப்போடும் பருவமழை! சிவப்பு எச்சரிக்கையில் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள்

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா். பாஜக ‘வா... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள 20... மேலும் பார்க்க

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை

இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும்’ என்று அந்த நாட்டின் நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் தொடா்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது

ஜம்மு-காஷ்மீரின் சா்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்களை கடத்தி வந்த 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஹிராநகா் செக்டாரில் உள்ள சான் தண்டா கிராமத்தில் சா்வதேச எல்லையொட்... மேலும் பார்க்க