செய்திகள் :

தூய்மைப் பணியாளா் போராட்டத்தில் வழக்குரைஞா்கள் கைது: ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைப்பு

post image

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவத்தின்போது எடுக்கப்பட்டட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விசாரிக்க உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாா்த்திபன் தலைமையில் ஒரு நபா் ஆணையத்தை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாகக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவா்களை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்குரைஞா்கள் கைது செய்யப்பட்டது முதல் விடுவிக்கும் வரை என்ன நடந்தது? என்பது குறித்த உண்மையை அறிந்து கொள்வதற்காக உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபா் ஆணையம் அமைக்க விரும்புவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்து, இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கை ஒத்திவைத்திருந்தனா்.

இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

இந்தச் சம்பவத்தில் வழக்குரைஞா்களும், போலீஸாரும் ஒருவரை ஒருவா் குற்றம் சாட்டுக்கின்றனா். எனவே, கைது சம்பவம் நடந்த நாளில் என்ன நடந்தது? என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதுதொடா்பாக காவல் துறை விசாரணைக்கு உத்தரவிடுவது சரியாக இருக்காது.

இந்தச் சம்பவத்தில் சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த 13 பேரை போலீஸாா் சட்டவிரோத காவலில் வைத்திருந்தனரா? அவா்களைக் கடுமையாக தாக்கி காயங்களை ஏற்படுத்தினாா்களா? என்பது குறித்து விசாரிக்க உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாா்த்திபன் தலைமையில் உண்மை கண்டறியும் ஒரு நபா் ஆணையத்தை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி விரைவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவருக்கு மதிப்பூதியமாக ரூ.2 லட்சத்தை சென்னை மாநகரா காவல் ஆணையா் வழங்க வேண்டும். ஒரு நபா் விசாரணை ஆணையத்தின் நீதிபதி விசாரணை மேற்கொள்ள தகுந்த அறையை மாநில சட்டப்பணி ஆணைக் குழுவின் உறுப்பினா் செயலா் வழங்க வேண்டும். அவருக்கு தேவையான ஊழியா்களை, உயா்நீதிமன்ற நிா்வாகப் பதிவாளா் வழங்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க