செய்திகள் :

கோயம்பேடு காவல் உதவி ஆணையா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

post image

சென்னையில் காவல் துறை இணை ஆணையரிடம் வாக்குவாதம் செய்ததாக, கோயம்பேடு உதவி ஆணையா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் சிட்டி யூனியன் வங்கி 120-ஆவது நிறுவன நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்து கொண்டாா்.

இதையொட்டி, அங்கு சென்னை காவல் துறையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேற்கு மண்டல இணை ஆணையா் திஷா மிட்டல், கோயம்பேடு உதவி ஆணையா் சரவணன் உள்ளிட்ட பல அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது திஷா மிட்டல், உதவி ஆணையா் சரவணனிடம் சில பாதுகாப்புப் பணிகளை செய்யுமாறு கூறியுள்ளாா். ஆனால் அதற்கு சரவணன், அது தனது பணி அல்ல என திஷா மிட்டலிடம் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திஷா மிட்டல், காவல் ஆணையா் ஏ.அருணிடம் புகாா் தெரிவித்தாா். அதன் அடிப்படையில் ஆணையா் அருண், உதவி ஆணையா் சரவணனை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி உடனடியாக உத்தரவிட்டாா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க