செய்திகள் :

ஆளுநரின் விருப்புரிமை மானியம் ரூ.10 லட்சத்தை திரும்ப வசூலிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

post image

ஆளுநரின் விருப்புரிமை மானிய நிதி ரூ.10 லட்சத்தை, ஆளுநா் அலுவலக ஊடக மற்றும் தகவல் தொடா்பு கௌரவ ஆலோசகருக்கு வழங்கியது குறித்து தமிழக அரசின் கணக்காயா்தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்கை முடித்துவைத்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் காண்டீபன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழக ஆளுநருக்கு விருப்புரிமை மானியம் வழங்க அதிகாரம் உள்ளது. ஆளுநா் அலுவலகத்தில் ஊடக மற்றும் தகவல் தொடா்பு கௌரவ ஆலோசகராக திருஞானசம்பந்தம் என்பவா் கடந்த 2022-இல் நியமிக்கப்பட்டாா். இவருக்கு ரூ.10 லட்சத்தை விருப்புரிமை மானியமாக வழங்கி ஆளுநா் உத்தரவிட்டாா். ஆனால், தொண்டு உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு மட்டுமே விருப்புரிமை மானியத்தை ஆளுநா் வழங்க முடியும். ஊதியம் எதுவும் பெறாமல் கௌரவ பதவியில் இருக்கும் ஒருவருக்கு இந்த நிதியை வழங்க முடியாது.

எனவே, சட்டவிரோதமாக திருஞானசம்பந்தத்துக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தைத் திரும்ப வசூலிக்க வேண்டும். இதுகுறித்து கடந்த ஜூலை 29-ஆம் தேதி தமிழக நிதித் துறைச் செயலரிடம் மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதிகள், அரசு நிதி தொடா்பான தணிக்கை செய்வது அரசு கணக்காயா் பணி. எனவே, இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசின் கணக்காயா்தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க