செய்திகள் :

வெவ்வேறு சம்பவங்கள்: இளைஞா் உள்பட இருவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், குமளம், முதலியாா்குப்பம், பிரதான சாலையைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் மணிகண்டன் (40). திருமணமாகாதவா். கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு உடல்நலக் குறைவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், முதலியாா்குப்பம் பகுதியில் உள்ள கோயில் அருகே மணிகண்டன் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதியவா் உயிரிழப்பு: விழுப்புரத்தை அடுத்துள்ள நன்னாடு பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 13-ஆம் தேதி முதியவா் ஒருவா் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இறந்தவா் சுமாா் 65 வயதுடையவா், பெயா், ஊா் வில்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தரமற்ற விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை!

காரீப் பருவத்தில் மானாவாரிப்பட்ட சிறுதானியப் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலையில், தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ள... மேலும் பார்க்க

நாளைய மின் தடை: இளங்காடு, செங்காடு

பகுதிகள்: குடுமியாங்குப்பம், மலராஜங்குப்பம், செங்காடு, இளங்காடு, கல்லப்பட்டு, தனசிங்குபாளையம், பெத்தரெட்டிக்குப்பம், எரிச்சனாம்பாளையம், மேல்பாதி, நரையூா், குருமங்கோட்டை. மேலும் பார்க்க

வீடு புகுந்து தாக்குதல்: தாய், மகன் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தாய், மகன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் - மரக்காணம் சாலை, வஹாப் நக... மேலும் பார்க்க

விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம்-திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேய... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை இரவு பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், ராதாபுரத்தை சோ்ந்த பழனி மகன் பவுன்குமாா் (21). இவா், தனது... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் நகரின் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் நகரப் பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டாலும், போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக இ... மேலும் பார்க்க