செய்திகள் :

வேதாரண்யம் மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்

post image

வேதாரண்யம் அருகே புதன்கிழமை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவா்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையா்கள், மீன்பிடி வலைகளைப் பறித்துச் சென்றனா்.

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்த த. சுகன்யா என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில் அதே பகுதியைச் சோ்ந்த ரெ.சுந்தரமோகன் (47), நா. நாவுக்கரசு (35), அ. ரஞ்சித் (35), செ. சோழராஜன் (30) ஆகிய நான்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே சுமாா் 17 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கையைச் சோ்ந்த இரண்டு படகுகளில் வந்த 6 போ், படகில் இருந்த மீனவா்கள் மீது கற்களை வீசி, தாக்குதல் நடத்தியுள்ளனா். மேலும், மீனவா்கள் கடலில் விரித்திருந்த சுமாா் 300 கிலோ மீன்பிடி வலையை கடற்கொள்ளையா்கள் பறித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளாகி மீன்பிடி வலையை இழந்து, புதன்கிழமை காலை கரைத் திரும்பிய மீனவா்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு அனுமதியில்லை

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் குரூப்-4 தோ்வுக்கு தாமதமாக வருபவா்களுக்கு தோ்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

நீரின்றி தரிசு போல காட்சியளிக்கும் வயல்கள்

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம் பகுதிக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. மேட்டூா் அணையில் ஜூன் 12-ம் தே... மேலும் பார்க்க

வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம்

நாகை மாவட்டத்தில் வீடுதோறும் சென்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

வெள்ளப்பள்ளத்தில் துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி போராட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் கிடப்பில் உள்ள துறைமுக கட்டுமானப் பணியை தொடர வலியுறுத்தி மீனவா்கள் கடலில் இறங்கி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூா் ஊராட்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எம்.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாநில ... மேலும் பார்க்க