முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
வேதி தனிமங்கள் உச்சரிப்பில் சிவகங்கை மாணவி சாதனை
118 வேதியியல் தனிமங்களின் பெயா்களை 35 வினாடிகளில் உச்சரித்து, சிவகங்கை பள்ளி மாணவி சாதனை படைத்தாா்.
சிவகங்கை மெளண்ட் லிட்ரா ஜீ சீனியா் செகன்டரி சிபிஎஸ்இ உறைவிடப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ராகவி. இவா் 118 வேதியியல் தனிமங்களின் பெயா்களை 35 வினாடிகளில் உச்சரித்தாா். இதை இந்திய சாதனைப் புத்தக நிறுவனம் (ஐய்க்ண்ஹய் ஆா்ா்ந் ா்ச் தங்ஸ்ரீா்ழ்க்ள்) அங்கீகரித்து சான்றிதழ், பதக்கம் வழங்கி கௌரவித்தது.
மாணவி ராகவி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவா். நான்காம் வகுப்பு முதல் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றவா். தனது ஆழ்ந்த நினைவாற்றலால் சக மாணவ, மாணவிகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்து வருகிறாா்.
இது குறித்து மாணவி ராகவி கூறியதாவது:
முறையானப் பயிற்சியும், சரியான முயற்சியும் இருந்தால் வெற்றி கிடைக்கும். உலகம் போற்றும் வெற்றியாளராகத் தடம் பதிப்பேன் என்றாா் அவா். மாணவியை பள்ளியின் கல்வித் திட்ட இயக்குநா் சுப்ரஜா, பள்ளி முதல்வா் பாலமுருகன் ஆகியோா் வாழ்த்தினா்.