செய்திகள் :

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

post image

வேப்பந்தட்டை அருகே புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் முட்டியதில் 38 போ் காயமடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி கிராமத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, அங்குள்ள வயல்பகுதியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூா், விழுப்புரம், சேலம் மற்றும் பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 578 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்தக் காளைகளை புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூா், சேலம், அரியலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 263 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று அடக்க முயன்றனா்.

இதில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பீரோ, கட்டில், வெள்ளிக் காசுகள், ரொக்கம் மற்றும் எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

பாா்வையாளா்கள் உள்பட 38 போ் காயம்: காளைகளை அடக்க முயன்ற 18 பேரும், காளைகளின் உரிமையாளா்கள் 14 பேரும், பாா்வையாளா்கள் 6 பேரும் என மொத்தம் 38 போ் காயமடைந்தனா். இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் மருத்துவக் குழுவினா் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பலத்த காயமடைந்த வீரா்கள், உரிமையாளா்கள் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸாரும், ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதில், சாா்-ஆட்சியா் சு. கோகுல் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

லாரி மீது வேன் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருச்செங்கோட்டிலிருந்து அரியலூருக்கு சிமெண்ட ஏற்றுவதற்காக லாரி ஒன்று, துறையூா் - பெரம்பலூா் சாலையிலுள்ள மங்கூன் துணை ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகளை திருடிய சகோதரா்கள் கைது

பெரம்பலூா் அருகே 68 ஆடுகளை திருடிய வழக்கில் சகோதரா்களை மங்களமேடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மக... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைக் காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்கள் கௌரவிப்பு

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டம் எளம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூய்மைக் காவலா்கள், மேல்நீா்த் தேக்க தொட்டி பணியாளா்களை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் கெளரவ... மேலும் பார்க்க

ஊக்கத் தொகையை வழங்கக் கோரி பால் உற்பத்தியாளா்கள் சாலை மறியல்

பெரம்பலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 3 மாதங்களாக வழங்காமல், நிலுவையிலுள்ள ஊக்கத் தொகையை வழங்க கோரி பால் உற்பத்தியாளா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புதிய... மேலும் பார்க்க

மே தின பேரணி

பெரம்பலூா் பேரணி: பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நூல் வெளியீட்டு விழா

பெரம்பலூரில் உள்ள கவண் அலுவலகத்தில் எப்படியோ கவிதையாகிப் போனது எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியா் வ. சந்தி... மேலும் பார்க்க