செய்திகள் :

வேலூர்: கோட்டையின் நடைபாதையில் ஏற்பட்ட பள்ளம்; அச்சத்துடன் நடந்து செல்லும் பாதசாரிகள்!

post image

வேலூரின் அடையாளமாக விளங்கக்கூடிய வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

வேலூர் கோட்டையை முழுவதுமாக சுற்றி வர கோட்டை சுற்று சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சாலையின் அருகிலேயே பாதசாரிகள், சுற்றுலா பயணிகள், பொது மக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நடைபாதை, கோட்டை சுற்று சாலையின் அருகிலேயே சுமார் 800 மீட்டருக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வேலூர் மீன் மார்க்கெட் எதிரில் உள்ள பகுதியில் நடைபாதை சிலாப் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

வேலூர் மீன் மார்க்கெட் பகுதிக்கு எதிரில் உள்ள நடைபாதை சிலாப் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி பொது மக்கள், “வேலூர் கோட்டையை சுற்றியுள்ள சுற்றுச்சாலையின் அருகே அமைந்துள்ள இந்த நடைபாதையை தினந்தோறும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

காலை நேரங்களில் நடைபயிற்சி செய்பவர்களையும் இங்கு பார்க்க முடியும். இப்படி எப்போதும் இந்த நடைபாதை பொது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வேலூர் மீன் மார்க்கெட் எதிரில் உள்ள நடைபாதையில் சிலாப் உடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த பள்ளத்தில் யாரும் தவறுதலாக விழுந்துவிடக் கூடாது என்பதற்காக தற்காலிகமாக இரண்டு குச்சியை நட்டு, கயிறு கட்டி சென்று உள்ளனர்.

எனவே இது போன்ற அலட்சிய பணிகளில் ஈடுபடாமல், முறையாக உடைந்த சிலாப்பை அகற்றிவிட்டு புதிய சிலாப் அமைத்து சீர் செய்ய வேண்டும். அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கோட்டைக்கு மிக அருகாமையில் இது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பணியாளர்கள் விரைந்து இந்த பணியை முடிக்க வேண்டும்” என்றனர்.

ஆபத்தான நிலையில் சிலாப் உடைந்த பகுதியை இரண்டு குச்சி மற்றும் கயிறு கொண்டு தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்துவதற்கு பதிலாக... முறையாக இந்த நடைபாதையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. நடவடிக்கை எடுப்பார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள்?

ஆட்டோ தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாத மாநில அரசும்; OLA, UBER-க்குச் சாதகமான மத்திய அரசும் | In-Depth

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு அரசுப் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், ஆட்டோ, டாக்சி போன்ற தன... மேலும் பார்க்க

``என் வீட்டிலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர்'' - பாமக ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இந்தக் கருத்து மோதலில் ராமதாஸ், தன் பெயரை அன்புமணியின் பெயருக... மேலும் பார்க்க

Bengaluru: சாலையில் அனுமதி இன்றி பெண்களை வீடியோ எடுத்த இன்ஃப்ளூயன்சர்... காவல்துறை எடுத்த நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் பலர், அனுமதியின்றி சாலைகளில் இருக்கும் பெண்களை, குழந்தைகளை வீடியோ எடுத்துப் பதிவிடுவது தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும் சதிச் செயல்தான் செய்தார்களா?’ - எடப்பாடி பழனிசாமிக்கு சேகர் பாபு பதிலடி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் வருமானத்தை வைத்து, கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் எப்படி தொடங்கலாம், கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது சதி செயல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ... மேலும் பார்க்க

``ரயில்வே கேட் பகுதிகளில் கேமராக்கள் பொருத்த வேண்டும்'' -ரயில்வே அமைச்சகத்தின் அதிரடி உத்தரவுகள்!

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. வேனில் நான்கு பேர் பயணித்தாகக் கூறப்படும் நிலையில், 3 பேர் உயிரிழந்திருகி... மேலும் பார்க்க

Trump Tariffs: பிரேசில் இறக்குமதிகளுக்கு 50% வரி வித்த அமரிக்கா; அதிர்ச்சியில் உலக நாடுகள்!

டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை, மீண்டு அமெரிக்காவை ஆகச் சிறந்த நாடாக மாற்றுவோம் என்ற கொள்கைகளை முன்நிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவை உலக ந... மேலும் பார்க்க