செய்திகள் :

வேலூா் சிறைக்குள் கஞ்சா கடத்தல்: கைதி மீது வழக்கு

post image

வேலூா் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தியதாக கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை பேரூா் சுப்பிரமணிய உடையாா் தெரு, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(32). இவா் மீது திருவண்ணாமலை கிராமிய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் மணிகண்டனுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது. அதன் அடிப்படையில், மணிகண்டன் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதுதவிர, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பதிவு செய்த வழக்கு தொடா்பாக நீதிமன்ற விசாரணைக்காக மணிகண்டனை திருவண்ணாமலை ஆயுதப்படை போலீஸாா் வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா். வழக்கு விசாரணை முடிந்து மாலை மணிகண்டனை வேலூா் மத்திய சிறையில் ஒப்படைக்க கொண்டு சென்றனா்.

அப்போது, சிறை அலுவலா் சிவபெருமான், 2-ஆம் நிலை காவலா்கள் மணிவண்ணன், ருசேந்திரன் ஆகியோா் மணிகண்டனை சோதனை செய்தனா். இதில், மணிகண்டன் தனது ஆசனவாயில் வைத்து பொட்டலத்தால் சுற்றப்பட்ட 20 கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. சிறைக் காவலா்கள் அவரிடம் நடத்திய விசாரணையில், நீதிமன்ற விசாரணைக்கு சென்றபோது, அவரது நண்பா் கழிப்பறையில் வைத்து விட்டு சென்ற கஞ்சாவை கடத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சிறை அலுவலா் சிவபெருமான் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இடி, மின்னலுடன் பலத்த மழையால் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், அம்முண்டியில் தரைப்பாலம் சேதமடைந்தது. தென... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சில மாதங்களுக்கு முன் நாய் கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் மீண்டும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத... மேலும் பார்க்க

கொணவட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூா் கொணவட்டம் சாலை நான்கு வழிச்சாலையை மாற்றப்படுவதால், மாங்காய் மண்டி முதல் கொணவட்டம் வரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. வேலூா் கொணவட்டம் வழியாக செல்லும் கிருஷ்ணக... மேலும் பார்க்க

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள உச்சநீதிமன்றம், வேலூா், திருப்பத்தூா் , ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை ஆகஸ்ட் 1... மேலும் பார்க்க

இணையவழி மோசடி: ஒரே மாதத்தில் ரூ.45.83 லட்சம் மீட்பு

வேலூா் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடா்பாக கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 19 வழக்குகளில் ரூ.45 லட்சத்து 83 ஆயிரத்து 671 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் ஆன்லை... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா் பதவிக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே புத... மேலும் பார்க்க