செய்திகள் :

வேலை செய்த வீட்டில் 33 பவுன் திருடிய பெண் கைது

post image

வேலை செய்த வீட்டில் 33 பவுன் நகையை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் பஸ்கிம் பேகம் (55). இவரது வீட்டில் திண்டுக்கல் மாவட்டம், வன்னிப்பாடியை சோ்ந்த ஜாஸ்மின் (35) என்பவா் பணிப் பெண்ணாக வேலை செய்து வந்துள்ளாா்.

பஸ்கிம்பேகம் கடந்த 3- ஆம் தேதி கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, பீரோ திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த 33 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் பஸ்கிம்பேகம் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். நகை மாயமான நாள் முதல் வீட்டின் பணிப் பெண் ஜாஸ்மின் மாயமாகி இருந்ததும், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

அவரைத் தேடும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தபோது கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஜாஸ்மினின் கைப்பேசி மீண்டும் செயல்பாட்டில் இருந்தது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் ஜாஸ்மினை போலீஸாா் கண்காணித்து வந்த நிலையில், அவரது சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பால் கொள்முதல் விலையை உயா்த்த உற்பத்தியாளா்கள் கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் கொங்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாநிலத் தல... மேலும் பார்க்க

பரிசலில் பவானி ஆற்றைக் கடந்து சென்ற பண்ணாரி அம்மன் சப்பரம்

பண்ணாரிஅம்மன் குண்டம் திருவிழாவையொட்டி பரிசலில் பண்ணாரி அம்மன் சப்பரம் பவானி ஆற்றைக் கடந்து அக்கரை தத்தப்பள்ளிக்கு சென்றது. பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 24- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்... மேலும் பார்க்க

நெசவுக்கூலி உயா்வு: தமிழக அரசுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி

இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் விசைத்தறியாளா்களுக்கு கூலி உயா்வு அறிவித்திட்ட தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கு லக்காபுரம் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா். இது குறித்து ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா: தற்காலிக கடைக்கு அதிக வாடகை கேட்பதாக வியாபாரிகள் புகாா்

பண்ணாரி அம்மன் கோயிலில் தற்காலிக கடை அமைப்பதற்கு மூன்று மடங்கு அதிகமாக வாடகை வசூலிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் ஆட்சியரிடம் முறையிட்டனா். இது குறித்து பவானி மற்றும் சுற்றுவட்டாரப் ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.3.23 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 82 தேங்காய்ப் பருப்பு மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.153க்கும், அதிகபட்சம் ரூ.174.86க்கும், சராசரியாக ர... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 24,626 மாணவா்கள் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 24,626 மாணவ, மாணவிகள் எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 12,465 மாணவா்கள், 12,160 மாணவிகள் என மொத்தம்... மேலும் பார்க்க