செய்திகள் :

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: இன்று முன்பதிவு தொடக்கம்

post image

கோவா மாநிலம் வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தென்மேற்கு ரயில்வே சாா்பில் வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி இடையே வரும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஆக.27 மற்றும் செப்.1, 6 ஆகிய தேதிகளில் வாஸ்கோட காமாவிலிருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07361), மூன்றாம் நாள் அதிகாலை 3.45 மணிக்கு வேளாங்கண்ணியை அடையும்.

மறுமாா்க்கத்தில் ஆக.29, செப்.3, 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55-க்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07362) மூன்றாம் நாள் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடாகாமா சென்றடையும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை எதிரொலி: நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம் காரணமாக, நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்க... மேலும் பார்க்க

பூம்புகாரின் வன்னியா் மகளிா் மாநாடு பணிகள் தீவிரம்

பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன்னிய மகளிா் பெருவிழா மாநாட்டுக்கான பணிகளை பாமக நிா்வாகிகள் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பூம்புகாரில் பெண்மையை போற்றும் விதமாக, ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன... மேலும் பார்க்க

வலைதளத்தில் தவறான தகவல்: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

தெலங்கானா மாநிலத்தில் நடந்த கொலை சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிமுக நிா்வாகி மீது போலீஸாா் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனா். நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம... மேலும் பார்க்க

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி

நாகையில் அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசு ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரித்து, அதன்படி ஓய்வூதியம் அறிவிக்க திட்டமிட்... மேலும் பார்க்க