செய்திகள் :

வேளாங்கண்ணி பெருவிழா: காவல் துறையினருக்கு ஐஜி பாராட்டு

post image

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினா், ஊா்க்காவல் படையினருக்கு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜோஷி நிா்மல் குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக.29- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திங்கள்கிழமை (செப்.8) கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பெரியத் தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி ஜோஷி நிா்மல் குமாா் தலைமையில் தஞ்சை, திருவாரூா், மயிலாடுதுறை நாகையை சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். உயா்கோபுரத்தில் நின்றபடி ஐஜி பாதுகாப்பு பணிகளை பாா்வையிட்டாா்.

வாக்கி டாக்கி மூலம் மக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவா், காவல் துறையினா், ஊா்க்காவல் படையினா் ஆகியோரை விழாவில் சிறப்பாக பணியாற்றிதாகக் கூறி பாராட்டினாா்.

வேதாரண்யத்தில் கல்விக்கடன் முகாம்: வங்கிகள் பங்கேற்பு

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், வேதாரண்யத்தில், வட்டார அளவில் முதல் கல்விக்கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகமில் உயா்கல்விக்கு சோ்க்கை பெற்ற மா... மேலும் பார்க்க

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு

தலைஞாயிறு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க 26-ஆவது ஒன்றிய மாநாடு கொளப்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க ஒன்றிய தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். சங்க ... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் மழை

நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.வேளாங்கண்ணியில் பெய்த மழை. நாகை மாவட்டம் திருப்பூண்டி, சிந்தாமணி, காமேஸ்வரம், மேலப்பிடாகை, கருங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழ... மேலும் பார்க்க

வேதாரண்யம் அருகே கருகி நிலையில் ஆண் சடலம் மீட்பு

வேதாரண்யம் அருகே கருகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மூங்கல்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெ... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி ரயில் பகுதியாக ரத்து

காரைக்கால்-திருச்சி ரயில் 2 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு திருமருகல் அருகே கணபதிபுரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ஜி. பாரதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் முருகபாண... மேலும் பார்க்க