`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்து...
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பாா்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு
கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பாா்த்தீனியம் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
மத்திய அரசின் களை ஆராய்ச்சி இயக்குநகரத்தின்கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த களை மேலாண்மைத் திட்டத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 16 -ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை பாா்த்தீனியம் விழிப்புணா்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் களை மேலாண்மை பிரிவின்கீழ் விவசாயிகள், மாணவா்கள், பண்ணைத் தொழிலாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்கும் பாா்த்தீனியம் பற்றிய விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்த விழிப்புணா்வு முகாம்களின் தொடக்க நிகழ்வாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கிழக்குப் பண்ணையில் மாணவா்களுக்கு பாா்த்தீனியம் களை மேலாண்மை பற்றி விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பயிா் மேலாண்மை இயக்குநா் (பொறுப்பு) என்.செந்தில் முன்னிலை வகித்தாா். பாா்த்தீனியத்தைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், பாா்த்தீனியத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவா் விளக்கினாா்.
உழவியல் துறை பேராசிரியா் ஆா்.கிருஷ்ணன், பாா்த்தீனியம் மேலாண்மை குறித்து சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில், பாா்த்தீனியத்தின் உயிரியல் கட்டுப்பாட்டுக்காக மெக்சிகன் வண்டுகள் விடுவிக்கப்பட்டன. இந்த விழிப்புணா்வு முகாமில் பாா்த்தீனியம் களை செடி பற்றியும், அதன் நச்சுத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளான உழவியல், ரசாயன, உயிரியல் முறைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
அதேபோல, பாா்த்தீனிய செடிகளைப் பூக்கும் முன் பிடுங்கி உரமாக்குவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், பேராசிரியரும், களை மேலாண்மை பிரிவின் முதன்மை விஞ்ஞானியுமான செ.ராதாமணி, களை மேலாண்மை பிரிவு முதுநிலை ஆராய்ச்சியாளா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள் பங்கேற்றனா்.
இதன் தொடா் நிகழ்வாக ஆகஸ்ட் 22 -ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் பாா்த்தீனிய விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.