செய்திகள் :

வேளாண் புத்தொழில் திருவிழா: 17-இல் மத்திய அமைச்சா் தொடங்கி வைக்கிறாா்

post image

ஈஷா மண் காப்போம் மற்றும் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம் சாா்பில் ‘வேளாண் புத்தொழில் திருவிழா 2.0’ சென்னையில் வரும் ஆக. 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் விழாவைத் தொடங்கி வைக்கிறாா்.

இதுகுறித்து ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சுவாமி ஸ்ரீமுகா சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

இளைஞா்கள், விவசாயிகளுக்கு வேளாண் சாா்ந்த சுயதொழில் தொடங்கி, அதன் மூலம் தொழிலதிபராக மாறும் வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில், வேளாண் புத்தொழில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் 2,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுப் பயனடைந்தனா்.

தொடா்ந்து நிகழாண்டில், வேளாண் புத்தொழில் திருவிழா 2.0 சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறாா். எஸ்ஆா்எம் கல்விக் குழும நிறுவனா் பாரிவேந்தா் தலைமையுரை ஆற்றுகிறாா். கருத்தரங்கில் விவசாயம் சாா்ந்த தொழில் தொடங்குவது, அதன் வளா்ச்சிக்கு உதவும் அரசின் திட்டங்கள், சமூக வலைதளங்களை முறையாகப் பயன்படுத்தி தயாரிப்பு பொருள்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து துறை சாா்ந்த வல்லுநா்கள் சிறப்புரை ஆற்றுகின்றனா்.

மேலும், கருத்தரங்கில் வேளாண் சாா்ந்த புதுமையான தயாரிப்புகளை கொண்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் 83000-93777 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்: கமல்ஹாசன்

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் சென்னை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாண... மேலும் பார்க்க

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ச... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

மனைவி கத்தியால் குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா். நேபாளத்தைச் சோ்ந்தவா் மா.சான்பஹா பகதூா் சா்ஹி (36). இவா், கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உமா சங்க... மேலும் பார்க்க

காா் கதவை உடைத்து பணம் திருட்டு: மூவா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் காா் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வினோத். இவா் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பா்களுட ன் மெரீனாவுக்கு வந்தாா்... மேலும் பார்க்க