செய்திகள் :

வைகாசி விசாக விழா: பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று கொடியேற்றம்; ஜூன் 9-இல் தேரோட்டம்

post image

பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.55 மணியளவில் கொடியேற்றம் நடைபெறுகிறது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, நாள்தோறும் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துகுமாரசுவாமி தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளி யானை, கற்பகவிருட்சம், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு வீதிகளில் உலா வருகின்றனா்.

முக்கிய நிகழ்வாக வரும் 8-ஆம் தேதி இரவு 7 மணியளவில் திருக்கல்யாணமும், 9-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் தேரோட்டமும் நடைபெறுகின்றன. வரும் 12-ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

விழா நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், கவியரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

அய்யலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த கோடாங்கி சின்னான்பட்டியில் நடைபெற்ற திருவிழாவுக்காக பொள்ளாச்சி ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களின் முன்னெடுப்பு தேவை: ஆட்சியா்

சுற்றுச்சுழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களமிறங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தை ம... மேலும் பார்க்க

திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல் திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பஜூலுல்ஹாக். இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலராவாா். பஜூலுல்ஹாக் த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும்... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்... மேலும் பார்க்க