செய்திகள் :

வைகை தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

post image

தில்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணியை தமிழக அரசின் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு நேரில் ஆய்வு செய்தாா்.

புது தில்லியில் தமிழ்நாடு அரசின் இரு இல்லங்கள் செயல்படுகின்றன. பழைய இல்லம் வைகை என்ற பெயரிலும், புதிய இல்லம் பொதிகை இல்லம் என்ற பெயரிலும் இயங்கி வந்தன.

இந்த நிலையில், சாணக்கியபுரி கெளடியல்ய மாா்கில் அமைந்துள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தை முழுவதுமாக இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டடப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியை தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு, அதன் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், கேளா ஒலி அலை கருவிகள் உதவியுடன் கான்கிரீட்டுகளின் திடத்தன்மை, தரம் குறித்தும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசின் புது தில்லிக்கான சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.. விஜயன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் மங்கத் ராம் சா்மா, தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையாளா் ஆசிஷ் குமாா், முதன்மை தலைமை பொறியாளா் மணிவண்ணன், தலைமை பொறியாளா் சென்னை மண்டலம் மணிகண்டன் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.

வடகிழக்கு தில்லி பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறிய... மேலும் பார்க்க

சுதந்திர தின கொண்டாட்டம்: தில்லியில் போக்குவரத்து மாற்றம்

குா்கான் மற்றும் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து நடைமுறைக்கு வந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் பின்னடைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டமான சூழல் நிலவியது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. தென்மேற்குப... மேலும் பார்க்க

ஜஹாங்கீா்புரி கொலைச் சம்பவத்தில் ஒராண்டுக்கும் மேல் தேடப்பட்டு வந்தவா் கைது

தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக மற்றொரு நபரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஒரு ஆண்டிற்கும் மேலாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ச... மேலும் பார்க்க

லாஜ்பத் நகரில் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து வழக்குரைஞா் தற்கொலை

தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து 33 வயது வழக்குரைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை மதியம் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வேன் ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை

2015 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றிய ஒருவருக்கு தில்லி உயா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 10... மேலும் பார்க்க