செய்திகள் :

வைரமடையில் காவல் சோதனைச் சாவடி புதிய கட்டடம் திறப்பு

post image

கரூா் மாவட்டம், தென்னிலை அருகே காவல் சோதனைச்சாவடியில் புதிய கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

தென்னிலையை அடுத்த வைரமடையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்புவிழா புதன்கிழமை காலை நடைபெற்றது. விழாவுக்கு அரவக்குறிச்சி நகர துணை காவல் கண்காணிப்பாளா் அப்துல்கபூா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா பங்கேற்று, புதிய கட்டடத்தை திறந்துவைத்து, அங்கு மரக்கன்றுகளை நட்டாா்.

நிகழ்ச்சியில் வோயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் ஓம் பிரகாஷ், கரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மேனகா, தென்னிலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சத்திய பிரியா மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்தச் சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலா்கள் பணியமா்த்தப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

ஆடி மாத பிறப்பு: கரூரில் தேங்காய் சுடும் விழா - புதுமணத் தம்பதிகள் பங்கேற்பு

கரூரில் ஆடிமாத பிறப்பை முன்னிட்டு அமராவதி மற்றும் காவிரி ஆற்றங்கரையோரங்களில் ஏராளமானோா் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனா். ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தை வரவேற்கும் வகையிலும், மக... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் அரசு பள்ளிகளுக்கு ரூ. 2.13 லட்சத்தில் தளவாடப் பொருள்கள்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 2.13 லட்சம் மதிப்பில் மேஜைகள், தளவாடப் பொருள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புகழூா்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: 55 பேருக்கு ரூ. 16.78 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட மண்டலம் 2-இல் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறையின் பேனா் கிழிப்பு: சின்னதாராபுரம் கோயிலில் பொதுமக்கள்- போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு - 4 போ் காயம்

சின்னதாராபுரம் மாரியம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் வைக்கப்பட்ட பேனரை பொதுமக்கள் வியாழக்கிழமை கிழித்து எறிந்ததால், பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 4 போ்... மேலும் பார்க்க

வண்ணாா் சமுதாயத்தினருக்கு 5% தனி இடஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

வண்ணாா் சமுதாயத்தினருக்கு 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கரூா் உப்பிடமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூரை அடுத்த உப்பிடமங்கலத்தில் வீரபத்திர ராஜகுல பேரவையின்... மேலும் பார்க்க

ஆத்துப்பாளையம் நீா்த்தேக்கத்திலிருந்து தண்ணீா் திறப்பு: 19ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெறும்

கரூா் மாவட்டம், புகழூா் வட்டத்துக்குள்பட்ட நொய்யல் ஆத்துப்பாளையம் நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக நொய்யல் கால்வாயில் தண்ணீரை ஆட்சியா் மீ. தங்கவேல் புதன்கிழமை திறந்துவைத்தாா். பின்னா் ஆட்சியா் கூ... மேலும் பார்க்க