செய்திகள் :

ஸ்ரீகாந்த் விவகாரம்: வெளியானது காவல்துறை அறிக்கை

post image

சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை(ஜூன் 23) சென்னையில் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் காவல்துறை இன்று(ஜூன் 24) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தன்னை போதைப்பொருள் பயன்படுத்த பழக்கப்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். படத்தில் நடித்ததற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 10 லட்சத்திற்கு கொகைன் போதைப்பொருளை பிரசாத் கொடுத்ததாகவும் இதனால் அதற்கு தான் அடிமையானதாகவும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7 வரை நீதிமன்றக் காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு போதைப்பொருள் வழங்கியதாக கண்டறியப்பட்ட சேலம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் என்ற பிரடோ, சா்வதேச போதைப் பொருள்கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜான் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்தநிலையில், பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தற்போது காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தினரா என்பது விசாரணையில் தெரியவரும். அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது உறவினர்களிடம் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பெற்றுக்கொண்டு கிருஷ்ணா விரைவில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, காவல்துறை இன்று(ஜூன் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தற்போது தலைமறைவாகியிருக்கும் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். அதன்படி மெயில... மேலும் பார்க்க

புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், புதுவை முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராஜா்’ விருது வ... மேலும் பார்க்க

மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்

பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் நடைமுறை ஜூலை மாதம் இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் மாநகர பேருந்து... மேலும் பார்க்க

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கைய... மேலும் பார்க்க

பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

அரசுப் பணி பதவி உயா்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் உத்தரவை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: அ... மேலும் பார்க்க