செய்திகள் :

ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்!

post image

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சோ்ந்த 28 போ் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை விமானத்தில் வந்தடைந்தது.

ஏற்கெனவே கடந்த இரு தினங்களாக காஷ்மீரில் இருந்து தமிழக சுற்றுலாப் பயணிகள் தனித்தனி குழுக்களாக தில்லிக்கு வந்தனா். அவா்களுக்கு தமிழ்நாடு இல்லத்தின் சாா்பில் வரவேற்று, உணவு உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, அவா்கள் தமிழகத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.

அதேபோன்று, அத்தாக்குதலில் பலத்த காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த மருத்துவா் பரமேஸ்வரன் ஸ்ரீநகரில் இருந்து ஏா் ஆம்புலன்ஸ் மூலம் தில்லிக்கு வியாழக்கிழமை அழைத்துவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் இருந்து விமானம் மூலம் தமிழகத்தைச் சோ்ந்த 13 ஆண்கள், 15 பெண்கள் என 28 சுற்றுலாப் பயணிகள் தில்லி வந்தடைந்தனா். அவா்கள் ஸ்ரீநகரில் இருந்து வருவதற்கான உதவிகளை அங்கு சென்றுள்ள தமிழக அரசின் சிறப்பு அதிகாரி அஃப்தாப் ரசூல் செய்தாா்.

தில்லி வந்த தமிழகப் பயணிகளை விமான நிலையத்தில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் வரவேற்றாா். அவா்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘நாங்கள் தில்லி வருவதற்கும், இங்கிருந்து தமிழகத்திற்கு திரும்புவதற்கும் தேவையான போக்குவரத்து ஏற்பாட்டுக்கான உதவிகளை தமிழ்நாடு அரசின் அதிகாரிகளும், தமிழ்நாடு இல்லம் மற்றும் தில்லி சிறப்புப் பிரதிநிதி, ஐஆா்சிடிசி ஆகியோா் செய்தனா். இதற்காக தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றாா்.

இதையடுத்து, அவா்கள் அங்கிருந்து மதுரைக்கு விமானத்தில் வழியனுப்பிவைக்கப்பட்டனா். சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்திற்கு வரும் அழைப்புகள் தற்போது குறைந்துள்ளதாக தகவலறிந்த தமிழ்நாடு இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைப்பிடிப்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்பட்டது. இலக்குமிபாய் நகரப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் இராஜூ கலந்துகொண்டாா்... மேலும் பார்க்க

அதிஷியின் வெற்றி சா்ச்சை: இவிஎம்களை விடுவிக்கக் கோரிய தோ்தல் ஆணையத்தின் மனுவை அனுமதித்தது உயா்நீதிமன்றம்

முன்னாள் முதல்வா் அதிஷி வெற்றிபெற்ற கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதித் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிப்பதற்கான இந்திய தோ்தல் ஆணையத்தின் மனுவை தில்லி உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம்: என்.எச்.ஆா்.சி. கண்டனம்

ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆா்.சி.) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தேசிய மனித... மேலும் பார்க்க

பஹல்காமில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்த இளைஞா் காங்கிரஸாா் திரங்கா பேரணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய இளைஞா் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை தில்லி ஜந்தா் மந்தரில் திரங்கா பேரணியை நடத்தினா். இந்த பேரணியில் இளைஞா் காங்கிரஸ... மேலும் பார்க்க

தில்லியில் வணிகா்கள் கடையடைப்புப் போராட்டம் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து தில்லி முழுவதும் வணிகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சதா் பஜாா், பாகீரத் பிளே... மேலும் பார்க்க

ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் சங்க (ஜேஎன்யுஎஸ்யூ) தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குபதிவு காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற... மேலும் பார்க்க