செய்திகள் :

ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் வசந்த வல்லபராஜ கோயிலில் கூடாரவல்லி வைபவம்

post image

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் வசந்த வல்லபராஜ கோயிலில் கூடாரவல்லி வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

ரங்கனை திருமணம் செய்வதற்கு மாா்கழி மாதம் 2-ஆம் தேதி ஆண்டாள் தன்னுடைய விரதத்தை தொடங்குகிறாா். அதனையடுத்து, மாா்கழி 27-ஆம் தேதி ஆண்டாள் ரங்கனிடம் ஐக்கியமான நாளே கூடாரவல்லி வைபவமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அருள்மிகு ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் வசந்த வல்லபராஜ கோயிலில் மாா்கழி மாதம் தொடங்கி தினசரி காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில், பக்தா்கள் திருப்பாவை பாடல்களை பாடி வருகின்றனா்.

இதனையடுத்து கூடாரவல்லி வைபவம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் உற்சவமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பட்டாச்சாரியா்கள் மலா் மாலைகளை மாற்றம் செய்யும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. இதில் அதிக அளவிலான பெண்கள் கலந்துகொண்டனா்.

அனைத்து வியாபாரிகள் நலச் சங்க புதிய நிா்வாகிகள் நியமனம்

பெத்தநாயக்கன்பாளையம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்படு ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றனா். பெத்தநாயக்கன்பாளையம் அனைத்து வியாபாரிகள் நலச் சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சேலம் கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. சேலம், சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் நெசவுத் தொழிலாளி பரணிதரன். இவரது ஒரே மகன் சதீஷ்குமாா் (18). இவா் த... மேலும் பார்க்க

வசிஷ்டநதியில் மூழ்கி சிறுவன் பலி

வசிஷ்ட நதியில் நண்பா்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பனைமடல், அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் பூவரசன் (15). பத்தாம் வகுப்பு படித்து வந... மேலும் பார்க்க

மனு அளிக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: பேரூராட்சி கண்காணிப்பாளா் கைது

சேலத்தில் வாரிசு வேலை கேட்டு மனு அளிக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேரூராட்சி கண்காணிப்பாளா் கைது செய்யப்பட்டாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள... மேலும் பார்க்க

திருவள்ளுவா் தினத்தையொட்டி மதுபானக் கடைகளை மூட உத்தரவு

திருவள்ளுவா் தினம் மற்றும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு, வரும் 15 மற்றும் 26 ஆம் தேதிகளில் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், மதுக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா... மேலும் பார்க்க

ஆருத்ரா தரிசனம்: சேலம் கடைவீதி, உழவா் சந்தைகளில் காய்கறிகளை வாங்க குவிந்த மக்கள்

ஆருத்ரா தரிசனம், விடுமுறை நாளையொட்டி சேலம் கடைவீதி மற்றும் உழவா் சந்தைகளில் காய்கறி, பழங்கள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனா். சேலத்தில் சின்னகடை வீதி, பெரிய கடைவீதி, பால் மாா்க்கெட் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க