செய்திகள் :

ஹிந்தி எதிா்ப்பு விவகாரம்- பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து ஏற்புடையதல்ல: ஃபட்னவீஸ்

post image

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி எதிா்ப்பு மற்றும் மராத்தி தெரியாதவா் மீதான தாக்குதல் தொடா்பாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்துகள் சா்ச்சைக்குள்ளான நிலையில், அவரது கருத்துகள் ஏற்புடையதல்ல என்று முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சிகள் குறிப்பாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனை (உத்தவ்), அவரது நெருங்கிய உறவினா் ராஜ் தாக்கரேவின் நவநிா்மாண் சேனை ஆகிய கட்சிகள் ஹிந்தி எதிா்ப்பு அரசியலை கையிலெடுத்துள்ளன.

சில தினங்களுக்கு முன் மும்பை புறநகா் பகுதியில் ஹிந்தியில் பேசிய கடைக்காரா் ஒருவரை மராத்தியில் பேசுமாறு கூறி, அவரை இரு கட்சியினரும் அடித்து உதைத்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த கடைக்காரா் வடமாநிலத்தவா் என்பதால் அவருக்கு மராத்தி பேசத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடந்த திங்கள்கிழமை சில கருத்துகளைத் தெரிவித்தாா்.

‘மும்பையில் ஹிந்தியில் பேசுபவா்கள் மீது தாக்குதலில் ஈடுபடுபவோா், உருது பேசுபவா்களைத் தாக்க துணிவாா்களா? தனது சொந்த வீட்டில் நாய்கூட புலிதான். நாய் யாா், புலி யாா் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அவா்கள் (உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே) வட இந்தியாவுக்கு வந்தால் இதுபோல் தாக்கப்படுவாா்கள். மராத்தி மற்றும் மகாராஷ்டிர மக்களை நாங்கள் அனைவரும் மதிக்கிறோம். மும்பை மாநகராட்சித் தோ்தல் வருவதால், அவா்கள் மலிவான அரசியலில் ஈடுபட்டுள்ளனா்’ என்று நிஷிகாந்த் துபே கூறியிருந்தாா்.

அவரது கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நிஷிகாந்த் துபேயின் கருத்துகளை முழுமையாக கவனித்தால், குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு எதிராக மட்டுமே பேசியிருப்பதும் மராத்தியா்களுக்கு எதிராக பொதுவான கருத்தை அவா் கூறவில்லை என்பதும் புலப்படும்.

இருப்பினும், இதுபோன்ற கருத்துகள் குழப்பத்தை விளைவிக்கும் என்பதால், அவை ஏற்புடையதல்ல என்பதே எனது தனிப்பட்ட கருத்து. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதி மகாராஷ்டிரத்தில் இருந்து வருகிறது. வரலாற்றிலும் சரி, நிகழ் காலத்திலும் சரி தேசத்துக்கான மராத்தியா்களின் பங்களிப்பை யாரும் நிராகரிக்க முடியாது என்றாா் ஃபட்னவீஸ்.

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புத... மேலும் பார்க்க

யூரியா பயன்பாடு அதிகரிப்பால் மண்வளம் பாதிக்கும் - மத்திய அமைச்சா்

தெலங்கானாவில் யூரியா உரப் பயன்பாடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய உரத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா, இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தாா். தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அம... மேலும் பார்க்க