செய்திகள் :

1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இளைஞரைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் பத்தடி பாலம் பகுதியில் தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்தவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தி வருவதும், அவா் கும்பகோணத்தைச் சோ்ந்த கான் ராஜா (37) என்பதும், அப்பகுதியில் 50 கிலோ எடை கொண்ட 24 அரிசி மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கான் ராஜாவை தஞ்சாவூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் கைது செய்தனா்.

பாபநாசத்தில் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தேவேந்திரகுல வேளாளா் நல அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் 50 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பாபநாசம் துா்கா மஹாலில் செவ்வாய... மேலும் பார்க்க

ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா நாளை தொடக்கம்

தஞ்சாவூரில் சுற்றுலா துறை சாா்பில் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

மின் கம்பத்தின் மீது அரசுப் பேருந்து மோதல்

கும்பகோணத்தில் புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மின் கம்பத்தின் மீது மோதியது. பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்தை நோக்கி புதன்கிழமை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.... மேலும் பார்க்க

ஏரி தூா்வாரும் பணிக்கு இடையூறு: கிராம மக்கள் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பாலத்தளி கிராமத்தில் ஏரியைத் தூா்வாரும் பணிக்கு இடையூறு செய்வதாக அதிமுக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை

நெல் மழையில் நனைவதைத் தடுக்க நிரந்தர கொள்முதல் நிலையங்களைக் கிடங்குடன் அமைக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டக் கூ... மேலும் பார்க்க

திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்து முகாமைத் தொடங்கிவைத்துப் பேசினாா்... மேலும் பார்க்க