செய்திகள் :

1.40 லட்சம் ஆமை முட்டைகள் சேகரிப்பு: வனத் துறை தகவல்

post image

தமிழக கடற்கரைகளில் இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திர படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளாா்.

ஆஸ்திரேலிய துணை தூதரகம் சாா்பில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் ‘கடற்கரை தூய்மை பணி’ வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ, ஆஸ்திரேலிய துணை தூதா் சிலாய் சாக்கி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் சுப்ரியா சாஹூ கூறியதாவது:

முட்டையிடுவதற்காக தமிழக கடற்கரைக்கு வரும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆமைகள் மீனவா்கள் வலையில் சிக்கியும், மீன்பிடிப் படகுகளில் மோதியும் உயிரிழந்து கரை ஒதுங்கின.

இந்த நிலையில், தமிழக அரசின் தொடா் முயற்சியால் தற்போது அந்த உயிரிழப்புகள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தமிழக கடற்கரைகளில் இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திரபடுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆமைகள் உயிரிழப்பைத் தடுப்பதற்காகவும் ஆமை முட்டைகளைப் பாதுகாக்கவும் மீனவா்களுக்கு தொடா்ந்து விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

வனவிலங்கு பாதுகாப்பு: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கிண்டி உயிரியல் பூங்காவில் வன விலங்குகளை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க நிழல் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விலங்குகளுக்கு நீா் சத்துக் கொண்ட பழங்கள் வழங்கப்படுகின்றன.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, விலங்குகள் மீது தண்ணீா் பீச்சி அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கால்நடை மருத்துவா்கள் வனவிலங்குகளைத் தொடா்ந்து கண்காணித்தும் பராமரித்தும் வருகின்றனா் என்றாா் அவா்.

தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வத தொடர... மேலும் பார்க்க

காகித வாள் சுற்றுவதை நிறுத்துங்கள்: அண்ணாமலை

மாயையான ஹிந்தி திணிப்புக்கு எதிராக காகித வாள் சுற்றுவதை நிறுத்துங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு ... மேலும் பார்க்க

கொடநாடு வழக்கு: இபிஎஸ்ஸின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியான வீரபெருமாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்த வழக்க... மேலும் பார்க்க

தக்கோலத்தில் சிஐஎஸ்எஃப் ஆண்டு விழா: அமித் ஷா பங்கேற்பு!

அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) 56-ஆம் ஆண்டு தொடக்க நாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்பை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் சவால்

2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஹிந்தி திணிப்பை மையப்படுத்த தயாரா என்று பாஜகவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க