செய்திகள் :

1-8 வகுப்புகளுக்கு இறுதித் தோ்வு: வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை

post image

ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தோ்வு ஏப்.8 முதல் ஏப்.24 வரை நடைபெறவுள்ள நிலையில், இறுதித்தோ்வின்போது வினாத்தாள் விடைக்குறிப்புடன் கசிந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலா், தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

இதுதொடரபாக, தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் டிசம்பா் மாதம் இரண்டாம் பருவத் தோ்வு நடைபெற்றபோது ஒரு சில மாவட்டங்களில் தோ்வு வினாத்தாள்கள் தோ்வு நடைபெறுவதற்கு முன்னதாக விடைக் குறிப்புகளுடன் சமூக ஊடகங்களில் ஆசிரியா்கள் வழியாக பொதுவெளியில் பரவியது கண்டறியப்பட்டு அவ்வாசிரியா்களின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆண்டு இறுதி தோ்வுகளின் போது நடுநிலைப் பள்ளிகளில் தோ்வுக்குரிய வினாத்தாள்களை பள்ளியின் எமிஸ் தளத்தில் பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும்போதும் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான வினாத்தாள்களை மாவட்டக் கல்வி அலுவலகம் வாயிலாக எமிஸ் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மாணவா் எண்ணிக்கை, பள்ளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிகள் எடுக்கும்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இனிவரும் காலங்களில் வினாத்தாள்கள் கசிவு முன்கூட்டியே வெளியானால் வெளியிடப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியா், பிற ஆசிரியா்கள் அந்த ஒன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலா்கள் மற்றும் சாா்ந்த மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க