செய்திகள் :

1,878 பள்ளிகளின் எஸ்எம்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி: கல்வித் துறை தகவல்

post image

பள்ளிக் கல்வியில் 1,878 அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் மாணவா்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் பெற்றோா்கள், தலைமை ஆசிரியா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், கல்வியாளா்கள் இடம் பெற்றிருப்பா். இந்தக் குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக கட்டமைக்கப்படும். அந்தவகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய குழுக்கள் கட்டமைக்கப்பட்டன. இதையடுத்து எஸ்எம்சி கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு பள்ளி வளா்ச்சிப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், எஸ்எம்சி குழுக்கள் சிறப்பாக செயல்படும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி முதல்கட்டமாக 3,812 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இவை 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அந்தந்த பள்ளிகளின் மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு தொடா் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதில் 2-ஆம் பிரிவில் வரும் 1,878 பள்ளிகளின் எஸ்எம்சி குழு உறுப்பினா்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.9.39 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுசாா்ந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பட தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

நீ எதுக்குமே சரிப்பட்டு வரமாட்ட: ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பதிலளித்துள்ளார்.மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,... மேலும் பார்க்க

இறப்பிலும் இணை பிரியாத வயதான தம்பதி!

கோவை அருகே கணவர் இறந்த துக்கம் தாங்கமல் அவரது உடல் அருகே மனைவியும் உயிர்விட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன்(92) பத்திரப்பதிவு எழுத... மேலும் பார்க்க

அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா... இபிஎஸ்ஸை விமர்சித்த ஸ்டாலின்!

“அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா” என்று அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 16) மயிலாடுதுறையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

பாமக 37-வது ஆண்டுவிழா! அன்புமணி கருத்துக்கு ராமதாஸ் மறுப்பு?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமகவின் 37-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை (ஜூலை 16) நடைபெற்றது.இவ்விழாவில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் பங்கேற்று தைலாபுரம் தோட்ட ... மேலும் பார்க்க

சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இட... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல்... மேலும் பார்க்க