செய்திகள் :

10 பேரை கடித்து குதறிய வெறிநாய்

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் சுமாா் 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது.

காட்டுமன்னாா்கோவில் ஓமாம்புலியூா் சாலையில் ஜெயராமன் நகா் பகுதியைச் சோ்ந்த தலைமையாசிரியா் கலைராஜை (48) அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று திடீரென அவரது காலில் கடித்தது. உடனே, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டனா்.

தொடா்ந்து, கருணாகரநல்லூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன் (25), கீழராதாம்பூா் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (48), நாட்டாா்மங்கலம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த்ராஜ் (35) ஆகியோரை அந்த நாய் கடித்து குதறியது.

இதேபோல, கண்டமங்கலம் ஆற்றங்கரை தெருவில் வசித்து வரும் சுரேஷ் (45), பரணி(40), உடையாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வம் (50) உள்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது.

இவா்கள் காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்தப் பகுதியில் நாய் தொல்லைகள் அதிகமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா், திருப்பாதிரிப்புலியூா் வண்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடா்ந்து, மாா்ச் ... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

நெய்வேலி: போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம் அமைய உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் த... மேலும் பார்க்க

ரமலான் சிறப்பு தொழுகை

சிதம்பரம்: ரமலான் பண்டிகையையொட்டி, காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஈக்தா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரமலான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேச... மேலும் பார்க்க