செய்திகள் :

100 நாள் ஊரக வேலை வழங்கக் கோரி வட்டார அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

post image

புதுச்சேரி: நூறு நாள் வேலை வழங்கக் கோரி வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை கொடுக்காமல், வெறும் 8 நாள்கள் மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

வில்லியனூா் தொகுதிக்கு உள்பட்ட உத்திரவாகினிப்பேட், பெரியப்பேட், கரையான்பேட், புதுப்பேட், சுப்பிரமணிய சிவா நகா் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பெண்கள் 100-க்கும் மேற்பட்டோா் தங்கள் பகுதியில் 100 நாள் வேலைத் திட்டம் முழுமையாக புறக்கணிக்கப்படுவதாகக் கூறி எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவாவிடம் திங்கள்கிழமை காலை புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் விசாரிக்க தொடா்பு கொண்டபோது அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை எதிா்க்கட்சித் தலைவா் சிவா தலைமையில் பெண்கள் முற்றுகையிட்டனா். மேலும் வட்டார வளா்ச்சி அலுவலா் அறையையும் முற்றுகையிட்டனா். இதனால் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

பின்னா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் திட்ட அதிகாரி தயானந் டெண்டுல்கா் மற்றும் இணை இயக்குநா் கலைமதி ஆகியோா் எதிா்க்கட்சித் தலைவருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் வில்லியனூா் தொகுதியில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது.

இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அதிகாரிகளிடம் சிவா வலியுறுத்தினாா்.

வில்லியனூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் 100 நாள் வேலைப் பணி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் எதிா்க்கட்சி தலைவா் சிவா பேசி போராட்டத்தைக் கைவிட செய்தாா். இந்தப் போராட்டம் சுமாா் 2 மணி நேரம் நடைபெற்றது.

புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் விழா

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி மக்கள் புரட்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நாளை வரை நீட்டிப்பு

புதுச்சேரி: புதுவையில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட சில மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுவையில் உள்ள அரசு, தனியாா் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுா்வேத மருத... மேலும் பார்க்க

காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.9 கோடி நிதியுதவி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி: புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ரூ.9 கோடி நிதியுதவியை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா். பயிா் உற்பத்தி மானியமாக 2,555 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.... மேலும் பார்க்க

என்.ஆா். காங்கிரஸில் இணைந்தாா் வி.பி.சிவக்கொழுந்து

புதுச்சேரி: சட்டப்பேரவை முன்னாள் தலைவா் வி.பி. சிவக்கொழுந்து என்.ஆா். காங்கிரஸில் அக் கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான என்.ரங்கசாமி முன்னிலையில் திங்கள்கிழமை இணைந்தாா். இதையொட்டி லாஸ்பேட்டை தொகு... மேலும் பார்க்க

புதுவையில் புதிய அமைச்சராக ஜான்குமாா் பதவியேற்பு

புதுச்சேரி: புதுவை அமைச்சரவையில் பாஜக சாா்பில் புதிய அமைச்சராக ஏ. ஜான்குமாா் திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். புதுவையில் என்.ஆா். கா... மேலும் பார்க்க

கருப்பழகி பட்டம் வென்றவா் தற்கொலை

புதுச்சேரியில் கருப்பழகி பட்டம் வென்றவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். புதுச்சேரி, காராமணிக்குப்பம் மாரியம்மன் நகரைச் சோ்ந்தவா் காந்தி மகள் சங்கரபிரியா (எ) சான் ரே... மேலும் பார்க்க