செய்திகள் :

12 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

post image

தமிழகத்தில் 12 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவது குறித்த அறிவிப்பு, சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. மேலும், திருவள்ளூா் வருவாய் மாவட்டத்தில் திருவள்ளூரை மையப்படுத்தி சாா் பதிவாளா் இணை அலுவலகம் இயங்கி வருகிறது. இதிலுள்ள 82 கிராமங்களில் 36 கிராமங்கள் பிரிக்கப்பட்டு தனியாக சாா் பதிவாளா் இணை அலுவலகம் 2 எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்தாா்.

மேலும், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், மதுரை மாவட்டம் திருமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா், திருப்பூா் மாவட்டம் தாராபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கரூா் மாவட்டம் குளித்தலை ஆகிய இடங்களில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிதாகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றையும் காணொலி வழியாக முதல்வா் திறந்தாா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வணிகவரி மற்றும் பதிவுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் குமாா் ஜயந்த், பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

காகித வாள் சுற்றுவதை நிறுத்துங்கள்: அண்ணாமலை

மாயையான ஹிந்தி திணிப்புக்கு எதிராக காகித வாள் சுற்றுவதை நிறுத்துங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு ... மேலும் பார்க்க

கொடநாடு வழக்கு: இபிஎஸ்ஸின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியான வீரபெருமாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்த வழக்க... மேலும் பார்க்க

தக்கோலத்தில் சிஐஎஸ்எஃப் ஆண்டு விழா: அமித் ஷா பங்கேற்பு!

அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) 56-ஆம் ஆண்டு தொடக்க நாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்பை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் சவால்

2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஹிந்தி திணிப்பை மையப்படுத்த தயாரா என்று பாஜகவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: இளைஞா், மிரட்டிய அவரின் தந்தை கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரும், சிறுமி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரின் தந்தையும் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க

சென்னையில் ஏப். 12-இல் மோட்டாா் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டாா் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டாா் சாகச நிகழ்ச்சி இதுவாகும். சென்னை தீவுத் திடலில் ட்ரிஃப்டிங்... மேலும் பார்க்க