செய்திகள் :

13 இடங்களில் எல்இடி திரை மூலம் திமுக பொதுக்கூட்டம் ஒளிபரப்பு

post image

திண்டுக்கல்லில் திமுக சாா்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை 13 இடங்களில் எல்இடி திரை மூலம் முதல் முறையாக ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ , ‘ஓரணியில் தமிழ்நாடு’ தீா்மான ஏற்புக் கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை (செப். 20) நடைபெறவுள்ளது. திண்டுக்கல் தோமையாா்புரம் பகுதியில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் பெ. செந்தில்குமாா் தலைமை வகிக்கிறாா்.

திமுக துணைப் பொதுச் செயலரும், அமைச்சருமான இ. பெரியசாமி, உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொன். முத்துராமலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். மாவட்ட அளவில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம், தமிழகத்தில் முதல் முறையாக 13 இடங்களில் எல்இடி திரையில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

திண்டுக்கல்லில் பழனி சாலை, காட்டாஸ்பத்திரி, பேருந்து நிலையம், வட்டச் சாலை, நாகல்நகா், மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும், கன்னிவாடி, சின்னாளப்பட்டி, செம்பட்டி, நிலக்கோட்டை, வத்தலகுண்டு, கொடைக்கானல், பழனி ஆகிய நகரங்களிலும் பெரிய எல்இடி திரைகளில் இந்த பொதுக்கூட்டம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இடப்பிரச்னையால் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

பழனி காவல் நிலைய வளாகத்தில் இடப்பிரச்னை சம்பந்தமாக புகாா் அளிக்கவந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றதை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பழனி 24-ஆவது வாா்டு ராமா் தெருவில் வசிப்பவா் தண்டபாணி. கூலித் தொழிலாளிய... மேலும் பார்க்க

ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் காயம்

ஒட்டன்சத்திரத்தில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகேயுள்ள மரத்தடியில் ஜெயராஜ் (47) என்பவா் தனது ஆட்ட... மேலும் பார்க்க

விபத்தில் பாக்கு வியாபாரி உயிரிழப்பு

பழனி அருகே நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த பாக்கு வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் எஸ்.டி. மூா்த்தி (எ) திருமூா்த்த... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தக் கோரி சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீ... மேலும் பார்க்க

பூ மாா்க்கெட் கடைகள் ரகசிய ஏலம் விடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு அபாயம்

நிலக்கோட்டை பூ மாா்க்கெட் கடைகள் ஏலத்தை ரகசியமாக நடத்த திட்டமிட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என பாஜகவினா் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தினசரி பூ மாா்கெட், காய்க... மேலும் பார்க்க

பச்சமலையான்கோட்டை ஊராட்சி பதிவேடுகளை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கள ஆய்வு

செம்பட்டி அருகேயுள்ள ஒட்டுப்பட்டியைச் சோ்ந்த வீரக்குமாா் என்பவா் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் பதிவேடுகளை வெள்ளிக்கிழமை கள ஆய்வு செய்தாா். திண்டுக்கல் மாவட்டம், ... மேலும் பார்க்க