செய்திகள் :

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

post image

காஞ்சிபுரம் அருகே 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி சிறுவர்கள் இருவர் உள்பட மூன்று பேரை காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுக்கா களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி , பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அருகில் இருந்த பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு இருந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு குளிர்பானம் வழங்கி உள்ளார். இதன் காரணமாக சிறுமி மயங்கிய நிலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்து உள்ளனர்.

2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!

மயக்கம் தெளிந்து வீடு திரும்பிய சிறுமி இது குறித்து, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி சிறுவர்கள் இருவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ், வழக்குப் பதிவு செய்து பள்ளி சிறுவர்கள் இருவரையும் காஞ்சிபுரம் சிறுவர் சீர்திருத்த இல்லத்திலும், இளஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானம் விழுந்து ஒருவர் பலி

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது தூண்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது தூண்கள் விழுந்ததில் ஒருவர் உய... மேலும் பார்க்க

வெற்றிகரமான மாடல் 787 - 8 ட்ரீம்லைனர் விபத்தில் சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட 787 - 8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விமானத் தயாரிப்பில் பிரபலமான போயிங் நிறுவனம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏ... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிடுக: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்த கீழடி முதல் மற்றும் 2-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். ... மேலும் பார்க்க

ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா, 7 பேர் குழு: அமைச்சர் கோ.வி.செழியன்

தஞ்சாவூர்: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன்... மேலும் பார்க்க

என் உருவபடத்தை வைத்து உற்சவம் செய்கிறார் அன்புமணி: ராமதாஸ் பேட்டி

திண்டிவனம்: உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசினம் செய்துவிட்டு என் உருவபடத்தை வைத்து உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபினமாக்கி, என் பெயரில் நடைபயனம் செய்யப் போகிறார்களாம். இவை எல்லாம் நாடகமே என பாமக ... மேலும் பார்க்க

கழிவு நீர் குழாய் பள்ளத்தில் மண் சரிந்து மாநகராட்சி ஊழியர் பலி

சென்னை மாதவரத்தில் கழிவு நீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலியானர். பெருநகர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3-க்கு உள்பட்ட மூ... மேலும் பார்க்க