செய்திகள் :

2-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

post image

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(செப். 2) காலை 80,520.09 புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 337.44 புள்ளிகள் அதிகரித்து 80,707.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 113.40 புள்ளிகள் உயர்ந்து 24,738.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த வாரம் பங்குச்சந்தை இறக்கத்தைச் சந்தித்த நிலையில் இந்த வாரம் தொடர்ந்து 2-வது நாளாக ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பெரும்பாலான நிஃப்டி துறை குறியீடுகள் லாபத்தில் வர்த்தகமாகின்றன. ஊடகம், ரியல் எஸ்டேட் மற்றும் எரிசக்தி துறை பங்குகள் நல்ல லாபம் பெற்றுள்ளன.

சென்செக்ஸ் நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எடர்னல், என்டிபிசி, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

அதேநேரத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டிரென்ட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

இந்த வாரம் நடைபெறும் 2 நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஷாங்காய் மற்றும் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் சந்தைகள் இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன.

Stock Market Updates: Sensex gains 300 pts, Nifty near 24,700

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக நிறைவு!

மும்பை: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் 15 சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரிதான கேமரா வடிவமைப்பும், பேட்டரி திறனும் மக்களைக் கவரும் அம்சங்களாக இருக்கும் ... மேலும் பார்க்க

ஐபோன் 17 எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? புது அம்சங்களாக என்னென்ன எதிர்பார்க்கலாம்?

இன்னும் சில நாள்களில் சந்தையில் அறிமுகமாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 17 மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபோன் 17 மாடல்களில் புது அம்சங்கள் ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முன்னதாக பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

மும்பை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக எச்சரிக்கையுடன் வங்கி மற்றும் ஆட்டோ பங்குகளில் கடைசி சில மணிநேர முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதால் இன்றைய ஆரம்ப ஏற்றங்களை மாற்றியமைத்து, சென்செக்ஸ் 206.6... மேலும் பார்க்க

2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவா்த்தனை

புது தில்லி: இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது. இது குறித்து தேசிய பணப்பரிமாற்றக் க... மேலும் பார்க்க

8 மாதங்களில் தங்கம் பவுனுக்கு ரூ.20,240 உயா்வு: பவுன் ரூ.77,640-க்கு விற்பனையாகி புதிய உச்சம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.77,640-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.20,2... மேலும் பார்க்க