செய்திகள் :

2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடிகள்; பறிபோன ரூ.4,245 கோடி! - RBI நடவடிக்கை என்ன?

post image

2024-25 நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், 2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ரூ.4,245 கோடி பறிபோய் உள்ளது.

கடந்த 2023-24-ம் ஆண்டில், 2.8 மில்லியன் வழக்குகளில் ரூ. 4,403 கோடி வரை நிதி மோசடிகள் பதிவாகியுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் மோசடிகளை கண்டுபிடிக்க மற்றும் புகாரளிக்க வலைதளம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் என்ன?
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் என்ன?

நிதி மோசடிகளை உடனடியாகப் புகாரளிப்பதற்காக, சிட்டிசன் ஃபைனான்சியல் சைபர் ஃபிராட் ரிப்போர்ட்டிங் மற்றும் மேனேஜ்மென்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதன் மூலம் மட்டும் இதுவரை 1.3 மில்லியன் புகார்களின் அடிப்படையில் சுமார் ரூ. 4,386 கோடி பாதுகாக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"வலைதள மற்றும் மொபைல் பயன்பாட்டு அச்சுறுத்தல்களை சரிசெய்ய பிப்ரவரி 2021-ல் டிஜிட்டல் கட்டண பாதுகாப்பு கட்டுப்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

RBI

அந்த வழிகாட்டுதல்களை இணைய வங்கி, யு.பி.ஐ மற்றும் கிரெடிட் அல்லது டெபிட் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டண பயன்பாடுகளுக்கு வங்கிகள் செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மோசடியாளர்களை கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கருவியான MuleHunter.AI-யும் RBI அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களையும் அதைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது," என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`பாரதியார் இல்லத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம்’ - ஆட்சியர் அறிவிப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வரலாற்று பக்கத்தில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப்பெரிய பாளையமாகவும் எட்டப்ப நாயக்கர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகவு... மேலும் பார்க்க

RTI: உள்ளே நுழையும் DPDP act பிரிவு 44 (3); பறிபோகும் ஆர்.டி. ஐ உரிமை... பிரச்னை என்ன? | Explainer

`மத்திய பட்ஜெட் - 2025' மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, வக்பு வாரிய விவகாரம் போன்ற விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பி வர... மேலும் பார்க்க

"அன்று இபிஎஸ் சொன்ன வார்த்தை; அவராகவே பதவி விலகுவதுதான் மரியாதை" - ஓ.பி.எஸ் பதிலடி

தூத்துக்குடியில் இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, " 'அ.தி.மு.க'வில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க வாய்ப்பில்லை. பிரிஞ்சது, பிரிஞ்சதுதான். இனி அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பேயில்ல... மேலும் பார்க்க

மீனவர்கள் 11 பேர் கைது; இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தொடரும் சிறைபிடிப்பு!

பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறை பிடித்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது பல ஆண... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `இளையராஜாவுக்கு பாராட்டு விழா' - தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

லண்டனில் கடந்த மாதம் மார்ச் 8-ம் தேதி 'சிம்பொனி 01 'Valiant'' சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்திருந்தார்.லண்டனுக்குச் செல்லும் முன், இந்தியாவிலிருந்து தமிழர் ஒருவர் பண்ணைப்புரம் கிரா... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி; மீண்டும் ஓபிஎஸ்..? - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாதுஎன்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல்... மேலும் பார்க்க