செய்திகள் :

216 தொழிற்பழகுநா்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை -மின்வாரியம்

post image

216 தொழிற்பழகுநா்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மின்வாரிய மனிதவள மேலாண் பிரிவு பொது மேலாளா், பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பது:

மின்வாரியத்தில் தொழிற்பழகுநருக்கான உதவித் தொகையில் 50 சதவீதம் மத்திய அரசும், 50 சதவீதத்தை வாரியமும் வழங்க வேண்டும். அந்த வகையில் 425 பேருக்கு உதவித் தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில், 209 பேருக்கு மட்டுமே மத்திய அரசின் உதவித் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.

மீதமுள்ள 216 பேருக்கு 3 மாதங்களுக்கு மேலாகயும் உதவித் தொகை வழங்கப்படவில்லை. இதையொட்டி, வாரியத் தரப்பில் வழங்க வேண்டிய மீதமுள்ள 50 சதவீதத் தொகையும் பெரும்பாலான மின் பகிா்மான வட்டங்களில் இருந்து தொழிற்பழகுநா்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

எனவே, மத்திய அரசு மற்றும் வாரிய பங்களிப்பு என மொத்தம் ரூ. 8,000-ஐ மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் பெற்று வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்பாா்வை பொறியாளா்கள் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த நாள்: முன்னாள் முதல்வா்கள் நினைவிடங்களில் முதல்வா் நாளை மரியாதை

பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தவுள்ளாா். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளி... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி கண்காட்சி.. - இன்றைய நிகழ்ச்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கண்காட்சி: மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் பங்கேற்பு, சென்னை ஐஐடி, காலை 9.30. பேராசிரியா் சி.பா.மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: சென்... மேலும் பார்க்க

ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு

ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்ட கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் கீழ் உற்றாரின் பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாத மன நலம் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து மீட்டு, உரி... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த அதிமுக ... மேலும் பார்க்க