செய்திகள் :

3 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம்!

post image

ஒருநாள் போட்டியில் விதிகளை மீறியதற்காக 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்கியது.

கடைசி ஒருநாள் போட்டியில் தெ.ஆ. அணி 352/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிளாசன் 87, பவுமா 82, ப்ரிட்ஸ்கி 83 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 355/4 எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் அதிகபட்ச சேஸிங் இது என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு, எவ்வளவு அபராதம்?

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா பேட்டிங் ஆடும்போது 28ஆவது ஓவரில் ஷாகின் ஷா அப்ரிடி வேண்டுமென்றே மேத்திவ் பிரிட்ஜ்கி ரன் ஓடும்போது இடைமறித்தார். பின்னர், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் அவருக்கு 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.

அடுத்ததாக 29ஆவது ஓவரில் டெம்பா பவுமா விக்கெட்டினை அவருக்கு அருகில் நெருக்கமாகச் சென்று கொண்டாடியதற்காக ஷகில், குலாம் ஆகிய இருவருக்கும் தலா போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.

சமீபத்தில் பிஜிடி தொடரில் சாம் கான்ஸ்டாஸை மோதிய விராட் கோலிக்கு 20 சதவிகிதம் அபராதம் விதித்ததும் குறிப்பிடத்தக்கது.

பிப்.14ஆம் தேதி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

என்னதான் ஆச்சு இங்கிலாந்து அணிக்கு? -முன்னாள் வீரர் காட்டம்!

இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு? என்று கேள்வியெழுப்பும் அளவுக்கு இந்திய அணிக்கு எதிராக மோசமான தோல்வியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து. இந்த நிலையில், இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவை குறைத்து மத்திப... மேலும் பார்க்க

ஆதரவும் எதிர்ப்பும்..! லபுஷேன் தொடர்ந்து விளையாடுவாரா?

ஆஸி. நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேனின் ஃபார்ம் குறித்து முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கவலையளிப்பதாகப் பேசியுள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் தேர்... மேலும் பார்க்க

இந்திய அணியின் ஃபீல்டிங்கில் முழு திருப்தி..! பயிற்சியாளர் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருப்பதாக ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் பேட்டியளித்துள்ளார். இங்கிலாந்து உடனான டி20 தொடரை இந்திய அணி 4-1 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் வென்று அசத்தியது. தொடரை வ... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது பெறும் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார் ஷுப்மன் கில். 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. இதில் ... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்! ரோஹித்துக்கு சரிவு!

ஐசிசியின் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்னும் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் 4-5 நாள்களே இருக்கும் நிலையில், இந்தியாவின் துணை கேப்டன் ஷுப... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய வீரர் பந்துவீச்சில் சந்தேகம்! தடைவிதிக்கப்படுமா?

ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ குஹ்னேமன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பந்துவீசுவதற்கு தடைவிதிக்கப்படுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்க... மேலும் பார்க்க