செய்திகள் :

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு: அரசிதழில் வெளியீடு

post image

தமிழகத்தில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட நிா்வாகங்களின் பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை எண்ணிக்கை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கக் கூடிய வருவாய் அளவு போன்றவற்றை அளவுகோல்களாகக் கொண்டு ஊராட்சிகள், பேரூராட்சிகளாகவும் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயா்வு செய்யப்படுகின்றன.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு ஆகிய ஊா்கள் பேரூராட்சிகளாக உள்ளன. இவற்றை நகராட்சிகளாக தரம் உயா்த்த முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவின் அடிப்படையில், 3 பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயா்வு செய்யப்பட்டன. இதுகுறித்த உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்டது. இந்த உத்தரவானது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-இன் படி, புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளின் வட்டங்கள் அடுத்த பொதுத் தோ்தலின் போது சரியான முறையில் பிரிக்கப்படும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவினர் அண்ணாமலையைப் போல இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல: சேகர்பாபு

சென்னை: அண்ணா அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாதவர் எப்படி செங்கல்லை பிடுங்க முடியும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.திருவான்மியூரில் பாஜக... மேலும் பார்க்க

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ். பாரதி

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார்.சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்... மேலும் பார்க்க

பர்கூர்: விவசாயியைத் தாக்கி 22 பவுன், ரூ.50,000 கொள்ளை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

பர்கூர் அருகே வீட்டில் புகுந்து விவசாயியைத் தாக்கி, 22 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை... மேலும் பார்க்க

அதிமுகவுக்குக் கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி: ஆர்.பி. உதயகுமார்

சென்னை: எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறுவுருவமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆர்.பி. உதயகுமார் பதிலளித்துள்ளார்.மேலும், அதிமுகவுக்கு கிடைத்த இறை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் பாலியல் புகார்! பணியாளர் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் கல்வித் துறை!

பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை புகார்கள் அதிகரிக்கும் நிலையில், பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.விதிகளில் திருத்தம் மேற்கொள்வது குறித்து குழந்தைகள் நல ஆணையம் ம... மேலும் பார்க்க

கோவில்பட்டிக்கு வருகைதரும் அப்பாவு, கீதாஜீவனுக்கு கறுப்புக் கொடியுடன் கிராம மக்கள் எதிர்ப்பு!

கோவில்பட்டியில் தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு வருகை தரும் பேரவைத் தலைவர் அப்பாவு , அமைச்சர். பெ. கீதாஜீவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை கம்பங்களில் கறுப்புக் கொடி கட்டியுள்ளனர... மேலும் பார்க்க