செய்திகள் :

3 மனைவிகள்; சகோதரிகள் - சஞ்சய் கபூரின் ரூ.10,000 கோடி சொத்து, தொழில்... கையிலெடுக்கப்போவது யார்?

post image

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் போலோ விளையாடியபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். அவர் விளையாடியபோது தேனீ ஒன்று கழுத்தில் கடித்து ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கம்பெனியின் சந்தை மதிப்பு; ரூ.30,000 தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.10,000 கோடி!

சஞ்சய் கபூர் சோனா காம்ஸ்டார் என்ற ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியை நடத்தி வருகிறார். அவரது தந்தை கடந்த 8 ஆண்டுக்கு முன்பு இறந்த போது அக்கம்பெனியின் பொறுப்பை சஞ்சய் கபூர் எடுத்தார். அக்கம்பெனியின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.30,000 கோடியாகும். அதேசமயம் சஞ்சய் கபூரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. சிறந்த போலோ வீரரான சஞ்சய் கபூர் பிரிட்டன் அரச குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

இந்நிலையில் சஞ்சய் கபூரின் திடீர் மரணம் அவரது குடும்பத்தில் புதிய குழப்பத்தையும் சட்ட சிக்கலையும் ஏற்படுத்தி இருக்கிறது. சஞ்சய் கபூருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இது தவிர மூன்றாவது மனைவிக்கு அவரது முதல் கணவர் மூலமும் ஒரு மகன் இருக்கிறார். இக்குழந்தைகள் அனைவரும் கம்பெனி நிர்வாகத்தை எடுத்து நடத்தும் அளவுக்கு இன்னும் முதிர்ச்சியடையவில்லை. இதனால் கம்பெனியை யார் நடத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. சஞ்சய் கபூர் முதலில் பேஷன் டிசைனர் நந்திதா என்பவரை திருமணம் செய்தார். அவர்கள் நான்கு ஆண்டுகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்த நிலையில் விவாகரத்து செய்து கொண்டனர். ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை.

இரண்டாவதாக பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூரை 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் 2016வது ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது. இருவரும் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறது. விவாகரத்தின் போது இரண்டு குழந்தைகள் மீதும் 14 கோடிக்கு பத்திரம் ஒன்றை சஞ்சய் கபூர் வாங்கி கொடுத்துள்ளார். இது தவிர ஒவ்வொரு மாதமும் கரீஷ்மா கபூரின் செலவு மற்றும் குழந்தைகளின் படிப்புக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.10 லட்சம் கொடுத்து வந்தார். இப்போது சஞ்சய் கபூர் இறந்துவிட்டதால் அப்பணத்தை யார் கொடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

சஞ்சய் கபூரின் தந்தைக்கு மும்பையில் வீடு இருந்தது. அந்த வீட்டை சஞ்சய் கபூர் விவாகரத்தின் போது கரீஷ்மா கபூருக்கு கொடுத்துவிட்டார். அதோடு குழந்தைகளையும் முழுமையாக கரீஷ்மா கபூர் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டார். கரீஷ்மா கபூர் விவகாரத்தில் சஞ்சய் கபூர் முழுமையாக செட்டில் செய்துவிட்டதால், அவர்கள் சஞ்சய் கபூர் தொழிலுக்குள் வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.

சஞ்சய் கபூர் மூன்றாவதாக பிரியா சச்சிதேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். பிரியாவிற்கு முதல் திருமணத்தின் மூலமும் ஒரு குழந்தை இருக்கிறது. இரண்டாவதாக சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்டார். இப்போது சஞ்சய் கபூர் சொத்தை யார் நிர்வகிப்பது, யாருக்கு எவ்வளவு சொத்தை கொடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கம்பெனியின் செயல்பாட்டில் எந்த வித பிரச்னையும் இல்லை என்று கம்பெனி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சஞ்சய் கபூருக்கு இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர்.

பிரியாவுடன் சஞ்சய்

அவர்கள் தற்காலிகமாக கம்பெனியை தங்களது கையில் எடுத்து நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அதனை அவர்கள் உறுதிபடுத்தவில்லை. முதல் மனைவி விவாகரத்தாகி சென்றுவிட்டதாலும், அவருக்கு குழந்தை இல்லை என்பதாலும் சொத்து பிரச்னைக்குள் நுழைவாரா என்று தெரியவில்லை. கம்பெனியை தற்போது இருக்கும் நிர்வாகம் தொடர்ந்து நடத்தும் என்று கம்பெனி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது கரிஷ்மா கபூர் மகளுக்கு 20 வயதாகிறது.

ஆனால் அவர் இன்னும் கம்பெனி நிர்வாக கமிட்டியில் இணையவில்லை. இதனால் சொத்தை, கம்பெனியை எப்படி பிரிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள சஞ்சய் கபூர் லண்டனில் மரணமடைந்து இருப்பதால் அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இறுதிச்சடங்கும் தாமதம் ஆகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மொபைல் கவர் விற்பனை செய்துகொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி; ஜார்கண்ட் சிறுவனின் இன்ஸ்பையர் ஸ்டோரி!

மொபைல் கவர் விற்பனை செய்யும் சிறுவன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். எப்படி இதனைச் சாத்தியமாக்கினார் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளலாம். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் குமார் எ... மேலும் பார்க்க

SWP மூலம் 50+ வயதினர் ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெறுவது எப்படி?

ஹாய்! எப்படி இருக்கீங்க?உங்களுக்கு 50+ வயதா? வாழ்வின் இனிமையான ஓய்வுக்காலத்தை நோக்கி திட்டமிட வேண்டிய நேரமிது. உங்க சேமிப்பின் பெரும்பகுதியை ஃபிக்சட் டெப்பாசிட் இல்ல ரொக்கமாக வைச்சு இருக்கீங்களா? நீங்... மேலும் பார்க்க

Condemn-க்குப் பதிலாக 'Condom’ என எழுதிய பாகிஸ்தான் பிரதமர்? வைரல் ஸ்கிரீன்ஷாட்டின் பின்னணி என்ன?

ஈரானின் அணு சக்தி நிலையங்கள், கட்டுப்பாட்டு மையம், அணு உலை ஆகியவற்றைக் குறிவைத்துக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதில் தாக்க... மேலும் பார்க்க

`அசல் தாஜ்மஹாலில் இருந்து நகலெடுத்து..!' - தாஜ்மஹால் போன்று வீடு கட்டிய தொழிலதிபர் | viral video

52 வயதான இந்திய தொழிலதிபர் ஒருவர், தனது மனைவிக்காக, தாஜ்மஹாலின் சிறிய நகலை வீடாகக் கட்டியுள்ளார்.தாஜ்மஹாலின் நகல் போல் இருக்கும் அந்த வீட்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில்... மேலும் பார்க்க

``பல தடவை சொல்லியும், அரசாங்கம் செய்யவில்லை'' - 3 நாளில் பாலத்தை கட்டி முடித்த கிராம மக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் உள்ளது சாடோங்கின் கிராமம். லாங்டிங்கிலிருந்து தொலைதூரம் என்பதால் அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேரவில்லை எனக் கூறப்படுகிறது. அரசின் மற்ற சேவைகளை விட அட... மேலும் பார்க்க