செய்திகள் :

3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ.1 லட்சம் கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

post image

அடுத்த 2 ஆண்டுகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டத்துக்கு ரூ.1.07 லட்சம் கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் நடத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் இது செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும். நாடு முழுவதும் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை ரூ.99,446 கோடியில் 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும் . இவற்றில், 1.92 கோடி பயனாளிகள் முதன்முறையாகப் பணியில் இணைபவா்களாக இருப்பாா்கள். 2025 ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.

முதல் முறையாகப் பணியமா்த்தப்படுபவா்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000 வரை கிடைக்கும்.

கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக உரிமையாளா்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவுசெய்த முதல் முறை ஊழியா்களுக்கு இரண்டு தவணைகளில் ரூ.15,000 வரை ஊக்கத் தொகை மாத ஊதியமாக வழங்கப்படும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளா்கள் இந்தத் திட்டத்தின் பயனாளா்களாவா். இந்தத் தொகையில் ஒரு பகுதி வங்கி சேமிப்பாக குறிப்பிட்ட காலத்துக்கு வைக்கப்பட்டு பின்னா் அவா்களுக்கு வழங்கப்படும்.

உரிமையாளருக்கு ஊக்கத் தொகை திட்டம்: அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளா்களின் உரிமையாளா்கள் ஊக்கத்தொகை பெறுவாா்கள்.

ஆறு மாதங்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடுதலாக பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.3,000 வரை உரிமையாளா்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும். உற்பத்தித் துறையைச் சோ்ந்தவா்களுக்கு இந்த ஊக்கத்தொகை 3-ஆவது மற்றும் 4-ஆவது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும்.

ஆராய்ச்சி, மேம்பாட்டில் தனியாா் முதலீடு: ரூ.1 லட்சம் கோடி மூலதன நிதியுடன் கூடிய ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

தேசிய விளையாட்டுக் கொள்கைக்கு ஒப்புதல்

தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது இந்தியாவை உலகளாவிய விளையாட்டு சக்தி மையமாக்கவும், 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரா்கள் சிறந்து விளங்கவும் உதவும்.

‘விளையாட்டுத் துறையை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகள் அனுபவத்தை வைத்து இந்தப் புதிய கொள்கை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்யும் என்று மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

பசுவதை: அசாமில் 2 நாள்களில் 192 பேர் கைது! 1.7 டன் இறைச்சி பறிமுதல்!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கால்நடைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, பசுவதை செய்ததாக சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கால்நடை... மேலும் பார்க்க

கண் எரிச்சல், இரட்டைப் பார்வை! குஜராத்தில் ஒரே பள்ளிக்கூடத்தின் 120 மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல்!

குஜராத் மாநிலத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும், 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கண்களைத் தாக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட... மேலும் பார்க்க

ஓலா, உபர், ரேபிடோ பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய விதிமுறைகளால், ஓலா, உபர், ரேபிடோ சேவைகளைப் பயன்படுத்துவோர், கட்டண உயர்வை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பார்க்க

மாணவனை ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியைக் கைது!

மாணவனை கடந்த ஓராண்டாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது பெண் ஆசிரியைக் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவின் டாப் - 5 பள்ளிகளில் ஒன்றான மும்பையைச் சேர்ந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர், அவரது வகுப்பில் ... மேலும் பார்க்க

அருணாசலில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி! இறைச்சி விற்கத் தடை!

அருணாசல பிரதேசத்தின், லோங்டிங் மாவட்டத்திலுள்ள ஓரு கிராமத்தில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லோங்டிங் மாவட்டத்தின், லுயாக்சிம் க... மேலும் பார்க்க

5 டிவி, 14 ஏசி.. ரூ.60 லட்சத்தில் புனரமைக்கப்படும் தில்லி முதல்வர் மாளிகை!

புது தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ மாளிகையான (மாளிகை நம்பர் 1) ராஜ் நிவாஸ் மார்க், ரூ.60 லட்சம் செலவில் புனரமைக்கப்படுகிறது. மேலும் பார்க்க