செய்திகள் :

3 நாள்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை! - சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; இருவர் கைது!

post image

தஞ்சாவூர், புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று இரவு இளைஞர் ஒருவருடன் 14 வயது சிறுமி ஒருவர் அழுது கொண்டு, நின்றுள்ளார். இதில் சந்தேகமடைந்த அப்பகுதியில் நின்றவர்கள் சிறுமி ஏதோ பிரச்னையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து ரோந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் சிறுமியிடமும், அந்த இளைஞரிடமும் விசாரித்துள்ளனர். இதில் அந்த இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து உடனே, ரோந்து போலீஸார் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியையும், அந்த இளைஞரையும் ஒப்படைத்தனர்.

சிறுமி பாலியல் வழக்கு

இதைத் தொடர்ந்து மேலும் விசாரணை செய்ததில் அந்த சிறுமி சென்னையில், மாயமானவர் என்பது தெரியவந்ததுடன் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம், சின்னக்கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(24) கூலித் தொழிலாளி. இவர் சென்னையில் வேலை பார்த்து வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த இந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகதீஸ்வரன், சென்னையிலிருந்து தனது ஊருக்கு வந்துவிட்டார். இந்த நிலையில், சிறுமி ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்த போது, தஞ்சாவூருக்கு வர சொல்லியுள்ளார். காதலன் அழைத்த நம்பிக்கையில் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, கடந்த 13ம் தேதி, சிறுமி தஞ்சாவூருக்கு வந்து ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போனை கட் செய்து விட்டார்.

போக்சோ வழக்கு

நேரம் போனதே தவிர ஜெகதீஸ்வரன் மீண்டும் காதலியான சிறுமியை தொடர்பு கொள்ளவில்லை. சிறுமி போன் செய்தும் எடுக்கவில்லை. புது ஊரு நம்பி வந்த காதலன் இப்படி செய்திட்டாரே என அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அழுது கொண்டு நின்றுள்ளார். அங்கு நின்ற, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் புவனேஸ்வரன் (30) சிறுமியிடம் விசாரித்துள்ளார். சிறுமியும் புவனேஸ்வரனிடம், நடந்ததை கூறி அழுதுள்ளார்.

எதுக்கும் கவலை படாதே, உன்னை காதலனுடன் சேர்ந்து வைப்பது என் பொறுப்பு என்று நம்பிக்கையாக பேசி நம்ப வைத்திருக்கிறார். அதன் பின்னர், புவனேஸ்வரன் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். அவருடைய மனைவி வீட்டில் இல்லாததால், திட்டம் போட்டு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தொடர்ந்து மூன்று நாள்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் வதை செய்திருக்கிறார். பிறகு, சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்த போது, போலீஸில் சிக்கி விட்டார்.

இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தனர். மேலும், சிறுமியை காதலித்து வர வைத்து ஏமாற்றிய ஜெகதீஸ்வரனையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்து வர வைத்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தனர்.

புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!

புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக க... மேலும் பார்க்க

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயிக்குப் பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணும், அவருடைய கணவரும் தங்களுடைய மூன்று வயது குழந்தையுடன் திருப்பூருக்குக் கடந்த 17-ஆம் தேதி வேலை தேடி வந்துள்ளனர். திருப்பூரில் பல இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளன... மேலும் பார்க்க

Ranveer Allahbadia: ``இவர் மூளையில் அழுக்கு..." - யூடியூபரை விளாசிய உச்ச நீதிமன்றம்!

India's Got Latent Show என்ற யூடியூப் நிகழ்ச்சியில் யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா செய்த சர்ச்சைக்குரிய நகைச்சுவை குறித்த பல்வேறு வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. சமய் ரெய்னா என்ற ... மேலும் பார்க்க

` வழக்கறிஞர் மீது தாக்குதல்' -திமுக அலுவலம், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்

திண்டுக்கல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் உதயகுமார்43. இவர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். திண்டுக்கல் திமுக அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் இவரின் மகளை அழைக்க டூவிலரி... மேலும் பார்க்க

ஆவடி: "பங்குச் சந்தையில போட்டா..." - இன்ஜினீயரிடம் ரூ.1.5 கோடி மோசடி; போலீஸிடம் சிக்கியது எப்படி?

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). சிவில் இன்ஜினீயரான இவரின் வாட்ஸ்அப் நம்பருக்குப் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான லின்க் ஒன்று வந்தது. அந்த லிங்கை ஜெயராமன் ஓப்பன் செய்தபோது ... மேலும் பார்க்க

பள்ளியில் வைத்து பாலியல் வதைக்குள்ளான சிறுமி; சிக்கிய சிறுவர்கள்- விசாரணை வளையத்தில் திமுக நிர்வாகி!

சேலத்தில் 13 வயது சிறுமியைப் பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவர்களை போக்சோ வழக்கில் போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட சிறுவர... மேலும் பார்க்க