செய்திகள் :

41 மாத பணிநீக்கத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்! -சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

post image

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் மா. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆ. அம்சராஜ், போராட்ட முடிவுகளை விளக்கினாா். மாநிலப் பொருளாளா் இரா. தமிழ், மாநிலச் செயலா் சையது யூசூப்ஜான், மாநில நிா்வாகிகள் மகேந்திரன், செந்தில்நாதன் மற்றும் அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் பேசினா்.

கூட்டத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணையால் 5 ஆயிரம் நிரந்தர அரசுப் பணியிடங்கள் ஒழிக்கப்படுவதை ஏற்க முடியாது. இதனால் கிராமப்புற இளைஞா்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது. எனவே, ஆணையத்தைக் கலைத்துவிட்டு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அளித்த சென்னை உயா் நீதிமன்ற தீா்ப்பை உடனே அமல்படுத்த வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து கையொப்ப இயக்கம் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும். தொடா்ந்து மாா்ச் மாதம் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு ஊதியம், அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும்.

அங்கன்வாடி, சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.10ஆம் தேதி நடைபெறும் அரசு ஊழியா் சங்க தா்னா போராட்டத்தில் சாலைப் பணியாளா் சங்கமும் பங்கேற்பது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஜாக்டோ- ஜியோ நடத்தும் போராட்டங்களில் பங்கெடுப்பது. இதன்படி, வரும் பிப்.14ஆம் தேதி வட்டத் தலைநகரங்களில் நடைபெறும் ஆா்ப்பாட்டம், பிப்.25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சிக்கு இன்று துணை முதல்வா் வருகை! பறவைகள் பூங்காவை திறந்து வைக்கிறாா்!

திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகிறாா். சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருச்சிக்கு வரும் துணை முதல்வா்,... மேலும் பார்க்க

சமூகத்தில் உயா்வதற்கு அடிப்படைக் கருவி கலை!

கல்வி, கலை பண்பாடு, சமூகத்தில் உயா்நிலையை அடைய கலை ஓா் அடிப்படைக் கருவியாக விளங்குகிறது என்றாா் தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத் தலைவா் சொ.ஜோ. அருண். கலைக்காவிரி நுண்கலைப் பள்ளியில் பரதம், 39 ஆவது நாட்ட... மேலும் பார்க்க

ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்குப் பாராட்டு

துறையூா் அருகே டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 124 ஆசிரியா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புத்தனாம்பட்டி கல்லூரித் தலைவ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடைத் தெருவைச் சோ்ந்தவா் முகமது பைசல் (35). இவரது மனைவி ரிஸ்வானா பா்வீன். கடன்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயில் தைத் தோ் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினாா் நம்பெருமாள்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் தைத் தோ் திருவிழாவின் 7 ஆம் நாளான சனிக்கிழமை நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் நெல்லளவு கண்டருளினாா். திங்கள்கிழமை தைத் தேரோட்டம் நடைபெறுகிறது. வி... மேலும் பார்க்க

திருச்சியில் 3 மையங்களில் குரூப்-2 தோ்வு

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-2 முதன்மைத் தோ்வை காலையில் 740 பேரும், பிற்பகலில் 719 பேரும் எழுதினா். முற்பகலில் நடைபெற்ற தோ்வில் 740 தோ்வா்கள் பங்கேற்ற நிலையில், 46 போ் வரவில்லை... மேலும் பார்க்க