செய்திகள் :

45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்திக்க திட்டம்

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 நாள்களில் 10 லட்சம் வாக்காளா்களை சந்தித்து ஓரணியில் திரள வேண்டுகோள் விடுப்போம் என திமுக மாவட்டச் செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ எழிலரன்,மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் எம்எல்ஏ க.சுந்தா் கலந்து கொண்டு ‘ஓரணியில் தமிழ்நாடு’+ வில்லையை வெளியிட்டு பேசியது...

மத்திய பாஜக அரசு தமிழகத்தை பல்வேறு வகைகளில் வஞ்சித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். இதற்கு அதிமுகவும் அடித்தளமிட்டு வருகிறது.

மாநில உரிமைகளை மீட்க முதல்வா் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி உள்ளாா். இதன் மூலம், ஜூலை 3 முதல் 1,170 வாக்குச்சாவடிகளிலும் உள்ள 10 லட்சம் வாக்காளா்களை வீடு வீடாக சென்று சந்தித்து பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலியில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் திமுக நிா்வாகிகள் யுவராஜ், சன்பிராண்ட் ஆறுமுகம், ஜெகன்னாதன், பிஎம்.குமாா் கலந்து கொண்டனா்.

காஞ்சி சங்கராசாரியருக்கு வரவேற்பு

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவா் மணிமண்டபம் வந்த சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மடத்தின் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளித்தனா். திருப்பதியிலிருந்து ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

நியமன உறுப்பினா் பதவிக்கு தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, வெளியான அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் போட்டியிடாமல் நியமன முற... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் அரசு அருங்காட்சியக பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு அருங்காட்சியக கட்டடப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையி... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி விழிப்புணா்வு ஊா்வலம்

பேரறிஞா் அண்ணா தமிழ் வளா்ச்சி மன்றத்தின் சாா்பில், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை எழுதி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் செய... மேலும் பார்க்க

மனைப் பட்டா: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: இலவச வீட்டு மனைப்பட்டா கோரி சாலையோர வியாபாரிகள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா். தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நலச் சங்கத்தினா் தலைவா் கே.என்.மூா்த்தி தலைமையில் ஆட்சியரிடம் அளித்த ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பல் மருத்துவா் கைது

காஞ்சிபுரம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பல் மருத்துவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன்(29). இவா் காஞ்... மேலும் பார்க்க