செய்திகள் :

48 நாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி: மத்திய அரசு

post image

‘2023-24-இல் 48 நாடுகளில் இருந்து இந்தியா தங்கம் இறக்குமதி செய்தது. தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெவ்வேறு இறக்குமதி வரிகள் விதிக்கப்படுகின்றன’ என மாநிலங்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மிகவும் விருப்பத்துக்குரிய நாடு அல்லது தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் (எஃப்டிஏ) தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை இந்தியா விதிக்கிறது.

மிகவும் விருப்பத்துக்குரிய நாடு அடிப்படையில் தங்கக் கட்டிகள் மீது 6 சதவீதமும், சுத்திகரிக்கப்படாத தங்கத்தின் மீது 5.35 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. 2023-24-இல் 48 நாடுகளில் இருந்து இந்தியா தங்கம் இறக்குமதி செய்தது. உள்நாட்டு தேவைகள், பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில்கொண்டு தங்கத்தின் மீதான வரியை குறைப்பது குறித்து பிற நாடுகளுடனான எஃப்டிஏ ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

ஆசியான் கூட்டமைப்பு நாடுகள், தென் கொரியா, ஜப்பான் மற்றும் மலேசியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் அந்நாட்டில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் தங்கத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை.

உ.பி. அரசுப் பள்ளிகளில் தமிழ்: முதல்வர் ஆதித்யநாத் தகவல்

உத்தர பிரதேச அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்- குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

‘தொழில்நுட்ப வளா்ச்சியால் நிதி மோசடிகளின் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசா்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க... மேலும் பார்க்க

விமான மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

விமானத் துறை சாா்ந்த இந்தியாவின் சா்வதேச ஒப்பந்தங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் விமான மசோதா, 2025, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் இந்த மசோத... மேலும் பார்க்க

சபா்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபா்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. கடந்த 1917-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

75 ஆண்டுகால தூதரக உறவு: இந்தியா-சீனா பரஸ்பர வாழ்த்து

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி இருநாட்டு தலைவா்களும் பரஸ்பர வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு படைகளிடையே ஏற்பட்ட மோதலைத் தொட... மேலும் பார்க்க