48 நாளில் வேண்டியவை நிறைவேறும்; தடைகளை உடைத்து ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெறலாம்! - நிகும்பலா ஹோமம்
24-6-2025 அமாவாசை இரவில் தாராசுரம் வீரபத்திரர் ஆலய நிர்வாகம் நிகும்பலா ஹோமம் நடத்தவுள்ளது. இதில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் தடைகளை உடைத்து ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெறலாம்! 48 நாளில் வேண்டியவை நிறைவேறும்!
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

எல்லா பிரச்னைக்குமே தீர்வுண்டு என்கிறது ஆன்மிகம். அழுத பிள்ளையே பால் குடிக்கும் என்பது போல பிரச்னைக்கு உரிய விஷயங்களுக்கு உரிய வேண்டுதல்களை நிறைவேற்றினால் நிச்சயம் பலனுண்டு. அதிலும் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், எந்த காரியத்திலும் தடை உண்டாவது, மனதில் ஏதோ ஒரு கவலை, அச்சம் ஏற்படுதல், எத்தனை பணம் சம்பாதித்தாலும் விரயமாகப் போய்விடுதல், முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, ஏதோ துர்சம்பவம் நடந்துவிடுமோ என்ற பீதி! இதெல்லாம் பலருக்கும் இருக்கலாம். இதெற்கெல்லாம் ஒரே தீர்வு நிகும்பலா ஹோமம் என்கிறது ஆன்மிகம்.
ஸ்ரீராமரும் பஞ்ச பாண்டவர்களும் இந்த ஹோமத்தை நடத்தி அன்னை நிகும்பலா எனும் பிரத்யங்கரா தேவியின் அருள் பெற்றே இழந்தவைகளை அடைந்தார்கள் என்கின்றன புராணங்கள். பெரும்பாலும் வீட்டில் வழிபாடு செய்ய முடியாத உக்கிர தெய்வம் பிரத்யங்கிரா. எலுமிச்சை கனியை பிரத்யங்கிராவாக வைத்து வணங்குபவர்களுக்கு உண்டு. அதேபோல உக்கிர பலன்களை அளிக்கும் இந்த நிகும்பலா ஹோமத்திலும் அடிக்கடி கலந்து கொள்வது தீமைகளை அழித்து நன்மைகளை நிச்சயம் அளிக்கும் எனலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
ஐயாவாடி, தாராசுரம் போன்ற சில கோயில்களில் மட்டுமே நடைபெறும் இந்த நிகும்பலா ஹோமம் வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்கக்கூடியது. வம்பு வழக்குகளை உங்களுக்கு சாதகமாக மாற்றக்கூடியது. போர் மோதல்களைத் தீர்க்கவும், உலக நன்மைக்காகவும் பக்தர்களின் தனிப்பட்ட வேண்டுதலுக்காகவும் கும்பகோணம் அடுத்த தராசுரத்தில் ஸ்ரீவீரபத்திரர் ஸ்ரீகாளி அம்மன் திருக்கோயிலில் ஸ்ரீகாளி, சூலினி, ப்ரத்யங்கிராதேவியை வணங்கி நிகும்பலா யாகம் எனப்படும் மிளகாய் வற்றல் யாகம் வரும் 24-6-25 அன்று அமாவாசை இரவில் நடைபெற உள்ளது. இதில் மிளகாய் வற்றல், பூசணிக்காய், மற்றும் அபூர்வ மூலிகைகள், நெய், தேன் என உள்ளிட்ட திரவியங்கள் இந்த ஹோமத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
இந்த நிகும்பலா ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் 26 வகையான தோஷங்கள், 64 வகையான சாபங்கள் நிவர்த்தி ஆவதாக ஆலய வரலாறு கூறுகிறது. வரும் ஆனி அமாவாசை நாளில் (24-6-2025) தாராசுரம் வீரபத்திரர் ஆலயத்தில் நிகும்பலா யாகம் நடத்தவுள்ளோம். மேலும் நிகும்பலா தேவி எனும் பிரத்யங்கரா பாரதத்தில் சில புண்ணிய தலங்களை தேர்ந்தெடுத்து அதில் விசேஷமான நிகும்பலா ஹோமத்தை நடத்த தமது 64 கோடி யோகினிகளுக்கு உத்தரவிட்டாளாம். அந்த வகையில் கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஸ்ரீவீரபத்திரர் உடனுறை பத்ரகாளி கோயிலில் 64 கோடி யோகினிகள் கூடி தேவியை வழிபட்டார்கள் என தலவரலாறு கூறுகிறது.

ஒட்டக்கூத்தர், ரவண சித்தர் ஜீவசமாதிகள் அமைந்துள்ள ஆலயமிது. அக்கமகா தேவியார் பாதம் பட்ட புனித பூமியிது. தேவி பத்ரகாளியும் ஸ்ரீவீரபத்திரரும் புண் சிரிப்போடு ஒட்டக்கூத்தருக்கு காட்சி தந்து அருளிய இடம். எனவே இங்கு வந்து வேண்டினாலே சகல பிரச்னைகளும் தீர்ந்து உங்கள் வாழ்வில் நலமும் வளமும் கூடும் என்பது நம்பிக்கை.
இந்த ஹோமத்தில் கலந்து கொள்பவர்களுக்குத் தரப்படும் ரட்சையும் குங்குமமும் உங்கள் பிரச்னைகளைக் கட்டாயமாகத் தீர்த்துவிடும் என்கிறார்கள். இந்த ஹோமத்தால் 48 நாள்களுக்குள் உங்கள் பிரச்னை யாவும் தீரும் அதிசயம் காண்பீர்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
NIGUMBALA HOMAM QR CODE FOR REGISTRATION

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பஸ்பம், குங்குமம் மற்றும் விசேஷ ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan