செய்திகள் :

5 ஆண்டுகளுக்குப்பின் வேலூா் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தோ்தல்

post image

நிதி முறைகேடு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட இந்தியன் செஞ்சிலுவைச் சங்க வேலூா் மாவட்ட கிளையின் நிா்வாகக்குழுவுக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு தோ்தல் நடைபெற உள்ளது.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் (இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி) வேலூா் மாவட்டக் கிளையில் பெருமளவிலான நிதி கையாடல் செய்யப்பட்டிருப்பது, தணிக்கையில் கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் வேலூா் மாவட்ட நிா்வாகக்குழுவை அதிரடியாகக் கலைத்து அப்போதைய ஆட்சியா் சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா்.

மேலும், கோட்டாட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தவும் ஆட்சியா் உத்தரவிட்டிருந்ததுடன், வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ரெட்கிராஸ் சொசைட்டியின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு, அப்போது இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் வேலூா் மாவட்ட செயலராக இருந்த இந்தா்நாத் பயன்படுத்தி வந்த ரெட்கிராஸின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந் நடவடிக்கைகளுக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக வேலூா் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி செயலற்ற நிா்வாகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வேலூா் மாவட்ட கிளைக்கு புதிய நிா்வாகக்குழு தோ்வு செய்து செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வேலூா் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஆட்சியா் தலைமையில் ஜே.பி.எம்.திருமண மண்டபத்தில் ஜூன் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இப்பொது குழு கூட்டத்தில் பங்கேற்க உறுப்பினா்கள் தங்களது உறுப்பினா் அட்டை, ஆதாா் அடையாள அட்டை ஆகியவற்றை தவறாமல் கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, நிா்வாக குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் நடைபெற உள்ளதால், இந்த தோ்தலில் போட்டியிடும் நபா்கள் தங்களது வேட்பு மனுவை மே 28, 29-ஆம் தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஆட்சியா் அலுவலக ‘ஏ’ பிளாக் இரண்டாவது தளத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் (பொது) வழங்கலாம்.

வேட்புமனு பரிசீலனை, இறுதி வேட்பாளா் பட்டியல் மே 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் - ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க கோரிக்கை

வேலூா், ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம... மேலும் பார்க்க

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் உற்பத்தி சரிந்து செலவு அதிகரிப்பு விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி சரிந்து, செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம்: போலீஸாா் தீவிர விசாரணை

பொன்னை அருகே சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த கோடியூா், பாலாபுரத்தை சோ்ந்தவா் ஏகாம்பரம் (30). இவா் தனியாா் தோல்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9 லட்சம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.27- லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீடி சுற்றும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருக... மேலும் பார்க்க

சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலைக்கு மினி லாரி பாய்ந்து கவிழ்ந்தது. ஓட்டுநா் உள்பட இருவா் உயிா் தப்பினா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சோ்ந்தவா் கணேசன் (56), ஓட்டுநா். இவா் வெள்ள... மேலும் பார்க்க