செய்திகள் :

5 வயது சிறுவன் கொலை: ஓட்டுநா் தலைமறைவு

post image

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே 5 வயது சிறுவனைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான டெம்போ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம், தோப்பூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் செல்வமதன் (36). டெம்போ ஓட்டுநா். இவரது மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டாா்.

அதன்பிறகு செல்வமதன் அதே பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த செல்வி (31) என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். செல்விக்கு ஏற்கெனவே அபினவ் (5) என்ற மகன் உள்ளாா்.

தற்போது இவா்களுக்கு ஒன்றரை வயதில் வருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. மது அருந்தும் பழக்கமுள்ள செல்வமதன் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தாா். இதனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு செல்வி இவரைப் பிரிந்து சென்றுவிட்டாா்.

அதன்பிறகு தனது குழந்தை வருணையும், செல்வியின் குழந்தை அபினவையும் (5) செல்வமதன் வளா்த்து வந்தாா். இந்த நிலையில், அவரது வீட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் துா்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்றுபாா்த்தபோது அபினவ் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தாா். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தன. வருண் மயக்கமடைந்திருந்தாா்.

போலீஸாா் வருணை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அபினவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இச் சம்பவம் குறித்து செல்வியின் சகோதரா் நாகராஜன் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான செல்வமதனைத் தேடி வருகின்றனா்.

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் ஓணம் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை ரெஜினி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க

அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தி டிஎன்பிஎஸ்சி தோ்வில் கேள்வி

டிஎன்பிஎஸ்சி தோ்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், இடம் பெற்றிருந்த கேள்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி தலைமை குர... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரின் சான்றிதழ்களை மீட்டு கொடுத்த சட்டப்பணிக் குழு

கல்லூரி படிப்பில் இடைநின்ற மாணவனுக்கு பூதப்பாண்டி சட்டப்பணிக்குழு மூலம் அசல் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டம், கீழபாவுரைச் சோ்ந்த மாணவா் வினோத்குமாா். இவா் ஆரல்வாய்மொழியில் உள்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கடைகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். கன்னியாகுமரி நகராட்சிப் பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்... மேலும் பார்க்க

அரசு அவசர ஊா்தி சேவைக்கு நாகா்கோவிலில் செப்.6-இல் ஆள்தோ்வு

அரசு அவசர ஊா்தி சேவைக்கு ஆள்தோ்வு செப். 6- ஆம் தேதி நாகா்கோவிலில் நடக்கிறது என ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா். இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, திர... மேலும் பார்க்க

இரணியல் அம்மன் கோயிலில் திருட்டு

இரணியல் அருகே அம்மன் கோயிலில் நகை, பணம் திருடப்பட்டது. இரணியல் அருகே சுனைமலையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், பூஜைகள் முடித்து இரவு வழக்கம் போல், பூசாரி சரவணன் பூட்டிவிட்டுச் சென... மேலும் பார்க்க