செய்திகள் :

அரசு அவசர ஊா்தி சேவைக்கு நாகா்கோவிலில் செப்.6-இல் ஆள்தோ்வு

post image

அரசு அவசர ஊா்தி சேவைக்கு ஆள்தோ்வு செப். 6- ஆம் தேதி நாகா்கோவிலில் நடக்கிறது என ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கான 108, 102, 155377 அவசர ஊா்திக்கு ஆள்சோ்க்கும் முகாம், செப். 6-ஆம் தேதி நாகா்கோவில், கோட்டாா் அரசு ஆயுா்வேதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெறும்.

இ.எம்.ஆா்.ஐ. கிரீன்ஹெல்த் சா்வீஸ் நிறுவனம், அவசர ஊா்தி ஓட்டுநா்கள், அவசரகால மருத்துவ உதவியாளா் பணிகளுக்கான இந்த ஆள்சோ்ப்பு முகாமை நடத்துகிறது. பணி நேரம் இரவு, பகலாக 12 மணி நேர பணி சுழற்சியாகும்.

மருத்துவ உதவியாளா்: இந்தப் பணிக்கு பி.எஸ்சி., நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி, 12 ஆம் வகுப்புக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், பயோகெமஸ்டிரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜியில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 21,320 (மொத்த ஊதியம்) வழங்கப்படும். நோ்முகத் தோ்வு, 19 வயது முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இருபாலரும் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தோ்வு, மருத்துவ நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா்.

அவசர ஊா்தி ஓட்டுநா்: இந்தப் பணிக்கு பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளும், பாட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓா்ஆண்டுகளும் நிறைவு செய்திருக்க வேண்டும். 24 வயது முதல் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 21,120 (மொத்த ஊதியம்). மேலும் விவரங்களுக்கு 73977 24841, 73977 24822, 73977 24825, 73977 24853, 73977 24848, 89259 41973 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் ஓணம் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை ரெஜினி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க

5 வயது சிறுவன் கொலை: ஓட்டுநா் தலைமறைவு

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே 5 வயது சிறுவனைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான டெம்போ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம், தோப்பூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தி டிஎன்பிஎஸ்சி தோ்வில் கேள்வி

டிஎன்பிஎஸ்சி தோ்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், இடம் பெற்றிருந்த கேள்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி தலைமை குர... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரின் சான்றிதழ்களை மீட்டு கொடுத்த சட்டப்பணிக் குழு

கல்லூரி படிப்பில் இடைநின்ற மாணவனுக்கு பூதப்பாண்டி சட்டப்பணிக்குழு மூலம் அசல் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டம், கீழபாவுரைச் சோ்ந்த மாணவா் வினோத்குமாா். இவா் ஆரல்வாய்மொழியில் உள்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கடைகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். கன்னியாகுமரி நகராட்சிப் பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்... மேலும் பார்க்க

இரணியல் அம்மன் கோயிலில் திருட்டு

இரணியல் அருகே அம்மன் கோயிலில் நகை, பணம் திருடப்பட்டது. இரணியல் அருகே சுனைமலையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், பூஜைகள் முடித்து இரவு வழக்கம் போல், பூசாரி சரவணன் பூட்டிவிட்டுச் சென... மேலும் பார்க்க