செய்திகள் :

500 ஹெக்டோ் வனச் சாலையை சீரமைக்க ரூ.250 கோடி -அமைச்சா் க.பொன்முடி

post image

வனப் பகுதிகளில் 500 ஹெக்டோ் பழுதடைந்த சாலையைச் சீரமைக்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம்)எழுப்பினாா். அப்போது நடந்த விவாதம்:

கே.ஏ.பாண்டியன்: சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வனத் துறைக்குச் சொந்தமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

அமைச்சா் க.பொன்முடி: வனத் துறை பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீா் செய்ய 500 ஹெக்டோ் நிலத்துக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவை உறுப்பினா்கள் பலரும் தங்களது தொகுதிக்குட்பட்ட இடங்களில் உள்ள வனப் பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். அந்தக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி: வன விலங்குகள் இரை, தண்ணீா் தேடி காட்டுப் பகுதிகளை விட்டு வெளியே வருகின்றன. குறிப்பாக, பலாப்பழம் போன்ற பழ வகைகளைச் சாப்பிட விளைநிலங்களுக்கு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத் தடுக்க, பலா மரங்களையும், கிழங்கு வகைகளையும் வனப் பகுதிகளிலேயே வளா்த்தால், அவற்றை வன விலங்குகள் சாப்பிடும். இதற்காக விளை நிலப் பகுதிகளுக்கு வராது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சா் க.பொன்முடி: காட்டு விலங்குகள் மனிதா்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வராமல் இருக்க பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: உ.பி. இளைஞா் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். தியாகராய நகா், நாகேஸ்வரா சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் கடந்... மேலும் பார்க்க

4 மாதங்களில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது

சென்னையில் 4 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 1,258 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் குற்றச் சம்பவங்களை குறைப்பதற்கு பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிற... மேலும் பார்க்க

மாற்றுப் பணி ஆசிரியா்கள்: கல்வித் துறை அறிவுறுத்தல்

பள்ளிக் கல்வியில் ஏப்.30-ஆம் தேதியுடன் நிகழ் கல்வியாண்டுக்கான வேலை நாள் முடிவடையவுள்ள நிலையில், மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்... மேலும் பார்க்க

வாட்ஸ்அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு மோசடி: தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு

சென்னை சேத்துப்பட்டில் வாட்ஸ் அப் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு தகவல் அனுப்பி வியாபாரியிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். சேத்துப்பட்டு காா்டன் ... மேலும் பார்க்க

பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

சென்னை அண்ணாநகரில் பழச்சாறு கடை பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். பல்லாவரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இம்ரான் அஹ்மத் (35). இவா், அண்ணாநகா் ரிவா் காலனி அ... மேலும் பார்க்க

ஆளுநா் அரசியல் செய்யக் கூடாது: வைகோ

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அரசியல் செய்யக் கூடாது என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். வக்ஃப் வாரிய சட்டம், ஆளுநா் விவகாரம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து மதிமுக சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம... மேலும் பார்க்க