செய்திகள் :

`549 கிராம் தங்கம்; 1 கிலோ கஞ்சா!’ - திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகும் கடத்தல் சம்பவம்!

post image

பேங்காக்கிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பெண் பயணியை தனியாக அழைத்து சோதனை செய்ததில், அவர் உடைமையில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து 1,663 கிராம் எடை உள்ள கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்தப் பயணியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

கஞ்சா

அதேபோல், துபாயிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு பயணியை தனியாக அழைத்து சென்று சோதனை செய்ததில், அவர் உடைமையில் 9 தங்க ராடுகளை வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க ராடுகளின் மொத்த எடை 549 கிராம் எனவும் இதன் மதிப்பு ரூ.47,97,162 எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கத்தை கடத்தி வந்த அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் அடிக்கடி தங்கம், வெளிநாட்டு கரன்சிகள், சிகரெட்டுகள், வெளிநாட்டு ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் என்று கடத்திவரப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் நிலையில், வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி இளம்பெண் கொலை: மொட்டைபோட்டு கங்கையில் நீராடல்; கேரளாவுக்கு தப்ப முயன்றபோது சிக்கிய காதலன்!

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரில் மருத்துவமனை ஒன்றிற்கு அருகில் இருந்த புதரில் டிராலி பேக் ஒன்று கிடந்தது. இது குறித்து போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த பேக்கை பறிமுதல் செய்து த... மேலும் பார்க்க

கோவை: மனைவியை சுட்டுக் கொன்று, தற்கொலை செய்த கணவர் - பின்னணி என்ன?

கோவை அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, கணவரும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் என்கிற பகுதியில் கிருஷ்ணகுமார் - சங... மேலும் பார்க்க

புல்லட் திருட்டில் ஸ்பெஷலிஸ்ட்; 9 புல்லட்கள் பறிமுதல்; 2 திருடர்கள் சிக்கியது எப்படி?

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டூவிலர் திருட்டு அதிகமாக நடப்பதாகத் தொடர்ச்சியான புகார்கள் வரத் தொடங்கின. இதனால் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் டூவிலர் திருட்டு வ... மேலும் பார்க்க

சிறுமலை: வெடிமருந்துடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; துப்பு துலக்கிய போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை 17 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே புதருக்குள் ஒரு ஆண் சடலம் கிடந்தது. போலீஸார், வனத்துறையினர் விசாரிக்க சென்றபோது அருகே கிடந்த பேட்டரி, ஒயர்கள், வெடி மருந்து கிடந்துள்... மேலும் பார்க்க

Haryana: 'நஷ்டமான தொழில்... காப்பீட்டுத் தொகையைப் பெறக் கொலை' - சினிமா பாணி சம்பவம்; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்தவர் ராம்மெஹர். கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு, தொழிற்சாலை நடத்தி வந்த இவர், லாக் டவுனின் போது இவரது தொழிற்சாலை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனால், அவரது கடன் அ... மேலும் பார்க்க

அம்பத்தூர்: பேட்மிட்டன் பயிற்சியாளர் கொலை வழக்கில் மூவர் சரண்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

அம்பத்தூர் டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. பேட்மிட்டன் பயிற்சியாளரான இவர், தந்தையின் கட்டிட ஒப்பந்த வேலைகளையும் கவனித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ்பாபு தனியாக... மேலும் பார்க்க