செய்திகள் :

6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

post image

தில்லி, மும்பை உள்ளிட்ட 6 உயா்நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், இடம்பெற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை கூடி இதற்கான பரிந்துரைக்கு அனுமதி அளித்தது.

அதில், மும்பை உயா்நீதிமன்றத்தில் மூன்று வழக்குரைஞா்களான அஜீத் பக்வான்ராவ் கதேதான்கா், ஆா்த்தி அருண் சேத், சுஷீல் மனோகா் கோடேஷ்வா் ஆகியரை நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான பாா்த்தசாரதி சென், அபூா்வா சின்ஹாரே ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் பிரசன்ஜித் விஸ்வாஸ், உதய் குமாா், அஜய்குமாா் குப்தா, சுப்ரதிம் பட்டாச்சாா்யா, பாா்த்தசாரதி சாட்டா்ஜி, ஷப்பா் ரஷிதி ஆகியோருக்கு ஓராண்டு கூடுதல் நீதிபதிகளாக பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி ரவீந்தா்குமாா் அகா்வால் நிரந்தர நீதிபதியாக நியமிக்கவும், ஆந்திர உயா்நீதிமன்றத்துக்கு ஹரிநாத் நூன்பள்ளி, கிரண்மாயி மாண்டவா, சுமதி ஜகதம், நியாயபதி விஜய் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளதாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லறையிலும் க்யூஆர் கோடு! நினைவலைகளைப் புதுப்பிக்க புதிய முயற்சி!!

மனிதர்கள், தாங்கள் மிகவும் விரும்பியவர்களின் நினைவுகளைப் பெட்டகமாகப் பாதுகாக்கவே விரும்புவார்கள். அப்படி ஒரு புதிய முயற்சியாகவே கேரள கல்லறைகளில் க்யூஆர் கோடு நிறுவப்பட்டுள்ளது.கேரளத்தில் உள்ள கல்லறைகள... மேலும் பார்க்க

பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது: ஃபட்னவீஸ்

"பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறமாக இருந்ததில்லை, இனியும் இருக்காது" என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினார்.2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜகவின் முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்பட... மேலும் பார்க்க

நமஸ்தே டிரம்ப், நம் பக்கம் டிரம்ப் என்றீர்களே? இதுதான் அந்த வெகுமதியா? மோடிக்கு கார்கே கேள்வி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டையை நிறுத்தியது தான்தான் என டிரம்ப் கூறிவருவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌன விரதத்தையே கடைப்பிடி... மேலும் பார்க்க

பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை தொடக்கம்: இதுவரை 3.93 லட்சம் பேர் தரிசனம்!

பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது! ராகுல்

தொழிலதிபர் அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு அழித்துவிட்டது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால... மேலும் பார்க்க

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்குரைஞர்கள் பதவியேற்றுக் கொண்டனர். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீத... மேலும் பார்க்க